ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

நான் உடைந்து நொறுங்கி கொண்டு இருக்கும் மணித்துளிகளில்...

 


நான் உடைந்து 

நொறுங்கி கொண்டு இருக்கின்ற 

அந்த மணித்துளிகளில் தான் 

ஒரு சில நெகிழ்வான தருணங்கள் 

ஆறுதலாக சாரல்களாக கனத்து 

என்னை 

பேரன்பு கொண்டு

தழுவிக் கொள்கிறது...

அதில் எனது கவிதையும் ஏனோ முட்டி 

மோதி முதல் இடம் பிடித்து விட்டு 

எனை பார்த்து குழந்தை சிரிப்பு 

சிரிக்கிறது...

அந்த குழந்தை சிரிப்பிற்காக 

நான் ஆயிரம் ஆயிரம் நொடிகளை 

எனை நொறுக்கி தள்ள சொல்லி 

அழைக்கிறேன்...

ஏன் தெரியுமா...

நான் தற்போது எழுதிக் கொண்டு 

இருக்கும் கவிதை 

எனை மீட்டு எடுத்து விடும் 

என்கின்ற கோடான கோடி 

நம்பிக்கை தான்...

#எனைமீட்டெடுக்கும்எழுத்து.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 12/08/24/திங்கட்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...