ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 21 ஆகஸ்ட், 2024

பெரும் ஆராவாரத்தோடு பயணிக்கும் காலத்தின் கிளைகளில்...

 


பெரும் ஆராவாரத்தோடு 

பயணிக்கும் காலத்தின் 

கிளைகளில் 

சற்றே சிறகு நனைந்து 

சிறு தூறலை ரசித்து 

இளைப்பாறும் சிறு பறவை நான்...

அதோ அங்கே சாலையில் 

பெரும் நெரிசலுக்கிடையே

பொருளோடு கூடிய பயணம் என்று 

நினைத்து ஏமாந்து 

உணர்வற்ற இயந்திரம் போல

ஓடிக் கொண்டே இருக்கும் 

பல தரப்பட்ட மனிதர்களின் 

அந்த பெரும் ஓட்டத்தை 

அந்த கிளையில் இருந்து 

பெரும் ஆச்சரியத்தோடு 

வேடிக்கை பார்த்து 

மெய் மறந்து 

இருக்கும் போது 

என் சிறகில் பட்டு 

தெறித்து விழுந்த அந்த துளியில் 

அங்கே என்னை ஒத்த உணர்வுடைய மனிதன் 

எனை அண்ணாந்து பார்த்து 

மெல்லிய புன்னகையில் 

எனக்கு கையசைத்து செல்கிறான்...

எங்கள் இருவரின் பெரும் அன்பின் 

உயிரோட்டத்தில் 

இந்த கால வெள்ளமும் 

கொஞ்சம் நெகிழ்ந்து 

களிப்படைந்து கரைகிறது...

#காலவெள்ளம்

#இளையவேணிகிருணா.

நாள் 22/08/24/வியாழக்கிழமை.

நேரம் காலை 7:37.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...