ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

கருணையற்ற மக்களின் மனம்...


எதுவும் சுதந்திரமாக செய்ய இயலாத 

கைதியின் நிலையை 

ஒத்த வாழ்க்கையில் 

ஆயிரம் ஆயிரம் கனவுகளுக்கு 

இங்கே பஞ்சம் இல்லை...

அந்த ஆயிரம் கனவில் 

ஒரு கனவேனும் கழுவேறாமல் 

என் ஆழ் மனமெனும் மடியில் 

புதைந்துக் கொண்டு 

தப்பித்தால் கூட போதும் 

நான் இந்த ஜகத்தின் நாயகியாக 

இந்த பிரபஞ்சத்தில் 

அறிவிக்கப்பட்டு விடுவேன்...

இதோ இந்த ஜகத்தின் நாயகி 

இப்போது அதே கனவை 

நிறைவேற்ற 

போராடிக் கொண்டு 

இருக்கிறாள் என்று 

உரக்க கத்தி கூப்பாடு போடுங்கள்...

அப்பொழுதேனும் 

இந்த கருணையற்ற மக்களின் மனம் 

கொஞ்சம் இரங்குகிறதா என்று 

எனக்கு கிசுகிசுத்தேனும்

என் செவிகளுக்கு அருகில் 

சொல்லி விட்டு போங்கள்...

#ஜகத்தின்நாயகி.

#இரவுகவிதை 🍁 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 12/08/24/திங்கட்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...