ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 15 மார்ச், 2024

அந்த உணர்வற்ற பயணத்தில்...

 


ஒரு நாள் பொழுதை

தன் உணர்வற்ற பயணத்தில்

செலவழித்து...

கோடிக்கணக்கான மதிப்பில் 

சொத்துக்கள் சேர்த்து...

ஏதோவொரு கௌரவத்தை

உரிமையாக்கி போராடி...

வெற்றுத் தாள்களாக பூமியில் 

சோர்ந்து வீழும் போது 

எங்கோ இருந்து வந்த பெரும் காற்று

அந்த தாளாகிய என்னை 

அந்த நாற்றம் பிடித்த நீரோடையில் 

தள்ளும் போது

சுவாசிக்க திணறி

கதறி அழுவதை அங்கே நான்கு பேர் 

வேடிக்கை பார்த்து விட்டு 

நமட்டு சிரிப்பு

சிரித்து எனை கண்ணாற கண்டு 

ரசித்து விட்டு

கடந்து செல்லும் போது தான்

உணர்கிறேன்

வாழ்வின் ரசம் நிச்சயமாக 

இதுவல்ல என்று....

#காலைகவிதை🍁🎻✨.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 16/03/24.

சனிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...