ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 15 மார்ச், 2024

அந்த உணர்வற்ற பயணத்தில்...

 


ஒரு நாள் பொழுதை

தன் உணர்வற்ற பயணத்தில்

செலவழித்து...

கோடிக்கணக்கான மதிப்பில் 

சொத்துக்கள் சேர்த்து...

ஏதோவொரு கௌரவத்தை

உரிமையாக்கி போராடி...

வெற்றுத் தாள்களாக பூமியில் 

சோர்ந்து வீழும் போது 

எங்கோ இருந்து வந்த பெரும் காற்று

அந்த தாளாகிய என்னை 

அந்த நாற்றம் பிடித்த நீரோடையில் 

தள்ளும் போது

சுவாசிக்க திணறி

கதறி அழுவதை அங்கே நான்கு பேர் 

வேடிக்கை பார்த்து விட்டு 

நமட்டு சிரிப்பு

சிரித்து எனை கண்ணாற கண்டு 

ரசித்து விட்டு

கடந்து செல்லும் போது தான்

உணர்கிறேன்

வாழ்வின் ரசம் நிச்சயமாக 

இதுவல்ல என்று....

#காலைகவிதை🍁🎻✨.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 16/03/24.

சனிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...