ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 7 மார்ச், 2024

நிச்சலனமான அந்த வேளையில்...

 


நிச்சலனமான அந்த நொடியில்

அந்த ஏகாந்த பறவையின்

ஒரு சிறு குரல் தான்

இந்த பிரபஞ்சத்தின் உயிர்ப்பை

எனக்கு மீட்டி தருகிறது!

எங்கோ தொலைந்து விட்டதாக

நினைத்தேன் என் நிம்மதியை...

நல்ல வேளை அப்படி எதுவும்

நடக்கவில்லை...

இதோ அந்த பறவையின் சிறகு

என்னை உரசி நான் அமர்ந்த

அந்த நிலத்தின் மரத்தடியில்

இளைப்பாறுகிறது

என்னை பார்த்து...

நானும் தான்...

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை 🍁

நாள்:07/03/24.

வியாழக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...