பக்கங்கள்

வெள்ளி, 15 மார்ச், 2024

அந்த வஸ்துவின் இறப்பில்...


அந்த எவரின் தேடலுமற்ற

இரவொன்றில்

மெழுகுவர்த்தியின் தீபத்தில்

தீயொன்று பற்ற வைத்து

அந்த வஸ்துவோடு காதல்

உறவாட எத்தனித்த போது

அந்த தேநீர் கோப்பையோ

எந்த பொறாமையும் இன்றி

அமைதி காத்து

என் ரசனையின் நிழலில்

இளைப்பாறி காத்திருந்தது...

அந்த வஸ்துவின் இறப்பின்

சுடும் துளிகளுக்கு பிறகு

அதனோடு காதல் உறவாட

நிச்சயமாக நான் வருவேன் என்று...

#இரவுகவிதை.

நாள் 15/03/24.

நேரம் முன்னிரவு 10:05.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக