தமக்கென்று ஒரு அடையாளம்;
தம் பெயரை சொல்ல பிள்ளை;
நாம் வாழும் வாழ்க்கைக்கு
ஏதோ அர்த்தம் இருக்க வேண்டும்
என்று ஆழ்ந்து நம்புவது
இவை எல்லாமே மஹாமாயா...
வாழ்க்கை என்பது இந்த வட்டத்திற்குள் அடைபட்டு
கிடக்க வேண்டும் என்ற
விதிகளுக்கு அப்பாற்பட்டது...
வாழ்தல் தவம்...
அதை எந்த அடையாளத்திற்குள்ளும்
வட்டத்திற்குள்ளும்
திணிக்க முயலும் போது
அதன் உண்மையான சுதந்திரம்
பறிக்கப்படுகிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:23/08/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக