ஜெயிப்பது தோற்பது
பற்றி எல்லாம் நான் எப்போதும்
கவலை கொண்டதில்லை!
நான் ஆழ்ந்த காதலோடு
நேசிக்க மறந்து
இயந்திரத்தனமாக எப்போதாவது
ஓடிக் கொண்டிருக்கும்
அந்த நேரத்தை நினைத்து தான்
தடுமாறி கலங்கி இருக்கிறேன்...
தொலைக்க கூடாத
அந்த மதிப்பு மிக்க
பொக்கிஷத்திற்காக...
நான் அழுது விடுவதை பார்த்து
என்னவோ ஏதோ என்று
பதறி விடுகிறார்கள் அங்கே
என் மீது பெரும் நேசங் கொண்ட
சில மனிதர்கள்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:02/05/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக