ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 3 மே, 2024

உன் சூட்சமத்தில் நான் எங்கே தொலைந்தேன்?


உன் சூட்சமத்தில்

நான் எங்கே தொலைந்தேன்

என் இருப்பு என்பதே

மாயை என்கின்ற போது 

நான் எனும் மாயையை

உன் திருவடியில் அழுத்தி...

உன் தூக்கிய திருவடியில்

என் பேரின்ப ஒளியை பாய்ச்சி 

பிறவி எனும் பெரும் காயத்திற்கு 

மருந்திட்டு

உன்னுள்

கரைத்துக் கொள்ளும் நாளும் எங்கே

ஒளிந்துக் கொண்டது என்று

வாழ்நாளில் தேடி தேடி 

தொலைகிறேன்

இந்த பேதை....

#ஆத்மசொரூபம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/05/24.

வெள்ளிக்கிழமை.

முன்னிரவு பொழுது 8:48.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...