ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 21 மே, 2024

அந்த கடந்து செல்லும் நண்பகல் பொழுதொன்றில்...


அந்த நண்பகல் கடந்த சில மணித்துளிகளில் 

வேலைகள் முடிந்து சற்றே 

இளைப்பாறுவதாக...

நான் அந்த மனதிற்கு சொல்லி வைத்தது தான் தாமதம்...

என்னை ஆக்கிரமித்து 

ஆயிரம் ஆயிரம் கேள்விகளை 

கேட்டு தொலைக்கிறது...

வாழ்வின் பயணத்தில் 

என்ன கற்றுக் கொண்டாய்?

இன்னும் எவ்வளவு தூரம் நீ பயணிக்க வேண்டும் என்று தெரியுமா?

வாழ்வின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யவே 

நீ இன்னும் சம்பாதிக்கவில்லை என்று 

குத்திக் காட்டும் கேள்விகள் உட்பட இப்படி பல பல கேள்விகள் கேட்டு 

இம்சை செய்துக் கொண்டே இருக்கும் போதே 

அதிகாலையில் இருந்து செய்த வேலையில் 

அயர்ந்து கண் மூடி உறங்கி விட்டேன்...

கண் விழித்து பார்க்கும்போது மாலை மணி ஐந்து என்று காட்டுகிறது...

மீண்டும் மாலை பணிகளை செய்ய ஆயத்தம் ஆகிறேன் நான்...

என்னை ஏதோ குற்றவாளி தப்பித்து செல்லும் போது 

காவல் அதிகாரி மறித்து பிடிப்பது போல 

கொஞ்சம் நில்...

நான் நண்பகலில் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உறங்கி விட்டாயே...

தற்போது அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு போ என்றது...

நான் அதை கண்டுகொள்ளாமல் வேகமாக எனது பணிகளில் கொஞ்சம் எரிச்சலோடு கவனம் செலுத்துகிறேன்..

உனக்கு திமிர் என்று மீண்டும் மறிக்கும் போது 

கொஞ்சம் நகர்ந்து செல் 

நான் எனது பசிக்கான உணவை தயாரிக்கும் நேரம் நெருங்கி விட்டது என்றேன்...

அதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் கேட்டது...

உயிர் பிழைத்தல் தான் சம்பந்தம் என்று விட்டேத்தியாக சொல்லி விட்டு ஒரு சுவையான உணவை தயாரிக்கும் உற்சாகத்தில் அதன் எரிச்சலை கண்டுக் கொள்ள 

எனக்கு நேரம் இல்லாமல் போனது....

#உயிர்பிழைத்தல்.

#இளையவேணிகிருஷ்ணா.

#நண்பகல் #கடந்த #மணித்துளிகள்.

நாள் 21/05/24.

செவ்வாய் கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...