ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 30 மே, 2024

இன்றைய சம்பவம்...

 


இன்றைய சம்பவம்:-

பல நாட்களாக ஒத்தி வைத்த வங்கிக்கு செல்லும் பணி இன்று...ஒத்தி வைப்பது என்ன அங்கே சென்றால் ஏதேனும் வம்பு வரும் என்றே நான் வங்கிக்கு செல்வதில் இருந்து பின் வாங்கி விடுவேன்... ஆனால் ஏடிஎம் அட்டை காலாவதி ஆகி பல மாதங்கள் ஆகிறது... அதனால் செல்ல வேண்டிய நிலை மற்றும் வங்கி புத்தகத்தில் பதிவு போட வேண்டிய பணியும் இருந்தது... எப்படியோ ஒவ்வொரு நாளும் இன்று நாளை என்று போக்கு காட்டி பிடிவாதமாக அந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று விட்டேன்... வரும் போது ஞாபகமாக பேனா எடுத்து வர வேண்டும் என்று நினைத்து மறந்து விட்டு அடுத்தவரிடம் கடன் வாங்கும் நிலை வேறு.. எப்படியோ வங்கி சேமிப்பு புத்தகத்தில் பதிவு போட காத்திருந்தேன்.. எனக்கு முன்பு இருக்கும் வாடிக்கையாளர் வரை பதிவு போட்டு தந்த இயந்திரம் எனது முறை வரும் போது அது வேலையை காட்டி விட்டது... அதாவது அது வேலை செய்யவில்லை என்று அந்த வங்கி ஊழியர் ஒரு அலட்சியமாக சொன்னது மட்டும் அல்லாமல் வங்கி இருப்பு இவ்வளவு இருக்கிறது இந்தாம்மா என்று அலட்சியமாக எனது சேமிப்பு புத்தகத்தை எனது கையில் திணித்த போது எனக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை...என்னை பார்த்தால் எப்படி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு பதிவு செய்யும் இயந்திரம் வேலை செய்யவில்லை என்றால் வேறு இயந்திரம் வாங்க வேண்டும் என்று கோபமாக சொல்லி விட்டு மேலும் பதிவு செய்யும் இயந்திரம் வாங்க வேண்டும் என்றால் பிரதம மந்திரியின் ஆர்டர் வேண்டுமா என்று சற்றே கோபத்தோடு கேட்டது தான் தாமதம்... அந்த ஊழியர் அட என்னம்மா இப்படி பேசுகிறீர்கள் என்று கொஞ்சம் பின்வாங்கி கொஞ்சம் நேரம் அமருங்கள் என்று சொல்லி விட்டு என்னவோ செய்து பதிவு செய்து தந்தார்... எனது ஏடிஎம் அட்டை பற்றி கேட்டதற்கு பக்கத்தில் உள்ள பெண் ஊழியரிடம் சொன்னார்.. அந்த பெண் ஊழியர் ஒரு படிவம் ஒன்றை கொடுத்து இதில் கையெழுத்து மட்டும் போட்டு விடுங்கள் என்று சொல்லி விட்டு உடனே அட்டையும் கொடுத்து விட்டார் அந்த பெண் ஊழியர்... ஏற்கனவே நான் ஏடிஎம் அட்டைக்கு விண்ணப்பம் செய்து இருந்தேன் அது பற்றிய விளக்கத்தை கொடுத்து விட்டு சில நிமிட காத்திருப்பிற்கு பிறகு வங்கி அட்டையை பெற்றுக் கொண்டு கொஞ்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு திரும்பி பார்த்தால் எனக்கு பேனா கடன் கொடுத்தவரை காணவில்லை... பிறகு அங்கே வேலை செய்யும் ஊழியரிடம் யாரேனும் வந்து பேனா கேட்டால் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி விட்டு வெளியே வந்தால் ஏன் இளைய வேணி இப்படி எங்கே சென்றாலும் சண்டை போடுகிறாய் என்று என் கணவர் கேட்கிறார்...நானோ நான் எங்கே சண்டை போடுகிறேன்... நான் மென்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொண்டு தான் உள்ளே போனேன்.. ஆனால் அவர்கள் தான் சண்டை போட வைத்து விட்டார்கள் என்றேன்... இதில் எனது தோற்றமும் ஒரு காரணம் என்று சொல்வேன்...எங்கே போனாலும் ஒரு சிலிப்பரை போட்டுக் கொண்டு நாகரீகமான அலங்காரங்கள் எதுவும் இல்லாமல் இயல்பாக இருந்தால் ஒன்றும் தெரியாத அறிவிலி என்று நினைத்து விடுகிறார்கள்.. பிறகு பேச ஆரம்பிக்கும் போது தான் அவர்களுக்கு தெரிகிறது... நான் விபரம் பல அறிந்தவர் என்று 🙄. மேலும் அரசியல் என்னை எப்போதும் கைவிட்டது இல்லை... நல்ல வேளையாக பிரதமரின் தியானத்தை கலைத்து விட்ட பாவம் எனக்கும் இல்லை அந்த வங்கி ஊழியருக்கும் இல்லை என்கின்ற ஆறுதலோடு வங்கியை விட்டு வெளியே வருகிறேன்...😌.

#வங்கி செயல்பாடுகளும்

#எனது செயல்பாடும்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...