ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 8 மே, 2024

இரவு கவிதை 🍁


எத்தனையோ நட்சத்திர 

கூட்டங்களுக்கு

நடுவில் பிறையை தேடி அலையும்

 கண்களை போல...

அத்தனை சலசலப்பான உலகத்திலும்

பேரமைதியை தேடி அலையும்

என் மனதின் நிச்சலனமான

பயணத்தை எண்ணி

வியக்கிறேன் இங்கே...

இந்த இரவோ என்னோடு

கொஞ்சம் உரையாடக் கூடாதா

உன் மனம் வரும் வரை என்று

கெஞ்சுகிறது...

ஒரு தேடலும் ஊடலும்

இங்கே கலந்து என்னை 

திணறடிக்கிறது

இளம் தென்றல் என் நிலையை 

பார்த்து மெலிதாக தென்றல் எனும்

இசையை கொண்டு தாலாட்ட

நான் சற்றே கண் அயருகிறேன்...

#இரவு கவிதை 🍁.

நாள் 08/05/24.

புதன்கிழமை.

#முன்னிரவுப் பொழுது 10:15.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...