ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 6 ஏப்ரல், 2024

இரவு கவிதை 🍁


அந்த சூழலில் 

நான் எப்படி நடந்துக் கொள்ள 

வேண்டும் என்று...

இந்த உலகம் 

ஆயிரம் ஆயிரம் யோசனைகளை

சொல்லி சொல்லி 

அனுப்பி வைத்தது...

அந்த சூழலை எதிர் கொண்டு

திரும்பிய என்னை 

இந்த உலகம் கேட்டது

என்ன நாங்கள் சொன்னபடி

எல்லாம் சரியாக தானே முடிந்தது 

என்றது!

ஆம்...அந்த சூழல் 

எந்த காயமும் அடையாமல்

எல்லாம் நன்றாக முடிந்தது என்றேன் 

நான்...

அவர்களும் புரியாமல் தலையாட்டி விட்டு

ஒரு வித நிம்மதியோடு விடை 

பெறுகிறார்கள்...

#இரவு கவிதை 🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:06/04/24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...