ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

அந்த ஈசலின் பெரும் காதல் .🍁🍁🍁


அந்த ஈசலின் பெரும் காதலை மறுக்க மனமில்லாமல்

சேற்றில் விழுகிறது

அந்த மழைத் துளி...

ஈசலும் அந்த இரவை கடந்து ஜீவித்து இருக்கவில்லை...

அந்த தூய்மையான மழைத் துளியும் ஜீவித்து இருக்கவில்லை...

இங்கே பெரும் காதலோடு ஒரு சில மணித்துளிகள் பயணித்து இறந்து விட்ட 

இந்த இருவரின் ஈடு இணை இல்லாத காதல்

இரவென்றும் பாராமல் ஏதேதோ

முணுமுணுத்துக் கொண்டே சாலையில் பயணிக்கும்

அந்த நகரத்தாரை கூவி அருகே அழைத்து ஒரு சில விநாடிகள் துக்கம் அனுசரிக்க சொல்கிறேன்...

அந்த துக்கம் அனுசரிக்க நாங்கள் செய்யும் விநாடிகளின் விரயத்தை எங்களுக்கு தாங்கவொணாத துயரத்தை கொடுத்து விடும் என்று குரல் கம்ம சொல்லி செல்கிறார்கள்...

இங்கே வாழ்தல் இனிதா

இறத்தல் இனிதா

பெரும் காதல் இனிதா...

நீங்களே சொல்லுங்கள்

பிரபஞ்சத்தின் நாயகர்களே!

#பிரபஞ்சத்தின்நாயகர்கள்.

#இரவுகவிதை.

முன்னிரவு நேரம் 11:25.

நாள்:26/04/24.

வெள்ளிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...