ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 6 டிசம்பர், 2023

நாயொன்று மெல்ல முனகி வேடிக்கை பார்க்கிறது...

 

அங்கே ஒரு வெள்ளம்

பெருக்கெடுத்து

நகரை சத்தம் இல்லாமல் 

விழுங்கிக் கொண்டு

இருக்கிறது...

இங்கே வெள்ளத்தால்

விழுங்கப்பட்ட நகரில் உள்ள

ஜீவன்களின் கணக்கெடுப்பு மட்டும் 

சத்தம் இல்லாமல்

நிகழ்த்தி விட்டு

உணர்வற்று கடக்கிறார்கள்

சில பல அரசியல் நியாயஸ்தர்கள்...

இவர்கள் நியாயத்தை

அங்கே அந்த வெள்ளப் பெருக்கில் 

இருந்து தப்பி பிழைத்த 

நாயொன்று பெரும் பசியோடு 

சாட்சியாக

மெல்ல முனகி வேடிக்கை பார்க்கிறது....

#நகரை சூழ்ந்த வெள்ளம்.

நேரம் அந்தி மாலை 6:50.

நாள்: #டிசம்பர் 6/23.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...