ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 16 டிசம்பர், 2023

அவன் அந்த மாய இருளில் என்ன செய்துக் கொண்டு இருக்கிறான்?

 


அவன் அந்த

மாய இருளில்

என்ன செய்துக் கொண்டு 

இருக்கிறான் என்று

தெரியவில்லை...

ஆனால் ஏதோவொன்று 

தொலைந்து விட்ட பொருளை 

தேடிக் கொண்டு 

இருக்கிறான் என்று மட்டுமே

புரிகிறது நமக்கு...

இருளில் தேடினால் எப்படி 

கிடைக்கும் 

என்று நாம் இங்கே 

யோசித்துக் கொண்டு இருக்கும் 

நொடியில்

அவன் அந்த பொருளை 

கண்டுபிடித்து விட்ட சந்தோஷத்தில் 

அதை இறுக பற்றிக் கொண்டு

ஓடி விடுகிறான்...

அவன் ஓடும் போது சில சருகுகள் 

சடசடவென மிதிப்படும் ஓசை மட்டும்

நமது காதுகளில் எட்டுகிறது..

அவன் கையில் கிடைத்த அந்த 

பொருள் எதுவாக இருக்கும் என்று

யோசித்து யோசித்து

இந்த இரவை தொலைக்கிறோம் 

நாம்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...