ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 24 ஜூலை, 2026

கர்ணன் நிலையும் தமிழ் நாட்டின் நிலையும்...


ஜனநாயகம் 

சற்றே விலகி நின்று 

வேடிக்கை பார்க்கிறது 

நடக்கும் கூத்தை...


இது ஜனநாயகமா 

இல்லை 

சல்லியன் நாடகமா

என்று...


என்ன கூத்து வேண்டுமானாலும் 

இந்த தமிழ் நாட்டில் 

அரங்கேற்றம் செய்யலாம் 

என்ற துணிவு இங்கே 

எவருக்கும் வருகிறது...


ஒரு காலத்தில் 

தரம் நிறைந்த மக்களால் 

இந்த மண் 

பெருமையடைய... 

இந்த மண்ணால் 

மக்கள் பெருமையடைய...


அது ஒரு பொற்காலம் என்று 

கிசுகிசுத்து பெருமூச்சு 

விடுகிறார்கள் 

அங்கே ஒரு சில மனிதர்கள்...


தற்போதோ

கொஞ்சமும் மண் மீதான 

பிணைப்பு இல்லாமல் 

இங்கே மக்கள் அனைவரும்

ஒன்று சேர்ந்து 

மகா சல்லியன் 

ஆனதால் ....


இங்கே தமிழ் நாடு 

கர்ணனை போல 

கதி கலங்கி நிற்கிறது...

என்ன செய்வது என்று 

தெரியாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:24/07/26.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...