ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

அந்த நகர காடுகளின் வெப்பத்தில்...

 

அந்த நகர காடுகளின்

வெப்பத்தில் தகிக்கிறது...

இந்த பிரபஞ்சம்...

அதோ அங்கே நகர காடுகளிடமிருந்து 

தப்பி பிழைத்த

ஒற்றை மரத்தின் நிழலில்

அடைக்கலமாகி

இந்த அகோர பசிக் கொண்ட 

மனிதர்களை பற்றி

ஆயிரம் புகார்களை

தனது மொழியில்

ஒப்புவித்து அங்கே தனது கூட்டில்

இரவின் சூட்சமத்தில்

அமைதிக் கொண்டு 

அந்த குருவி

உறங்க போவதை பார்த்து 

அங்கே இருந்த காலமோ

மென்மையாக விசிறி 

தாலாட்டு பாடுகிறது

அந்த தாலாட்டில்

இந்த பிரபஞ்சமே

பேரமைதி கொண்டு உறங்கி கிடக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/10/25.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...