ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 10 ஜூலை, 2025

அந்த அமைதியான பூங்காவனத்தில்...

 

அந்த அமைதியான 

பூங்காவனத்தில் தான் 

அந்த புழுதி படிந்த காட்டாற்று 

வெள்ளம் 

ஆயிரம் ஆயிரம் குப்பைகளை சுமந்து 

அந்த பூங்காவனத்தை 

ரணமாக்கி நகர்ந்தது!

ஏனோ அது வரை 

அந்த பூங்காவனத்தின் 

பேரழகை ரசித்தவர்கள் சிறிதும் 

இரக்கமின்றி 

எல்லோரும் சிதறி ஓட 

நான் மட்டும் அதுவரை 

அந்த பூங்காவனத்தில் 

அனைவரையும் வசீகரித்த 

பூக்களின் சிதைந்து போன

இதழ்களை சேகரித்து 

கைகளில் ஏந்தி அமைதியாக 

அந்த நீர் சூழ்ந்த பூங்காவனத்தின் 

ஒரு சிறு மூலையில் 

அஞ்சலி செலுத்துவதை 

அங்கே அந்த பூங்காவனத்தில் 

இதுவரை அடைக்கலம் ஆகி இருந்த 

பறவைகள் 

என்னை சுற்றி சுற்றி 

பேரன்பின் அலையை 

செலுத்தி வருவதை 

இந்த பிரபஞ்சம் வேடிக்கை 

பார்க்கிறது அந்த சூனியமான

பேரமைதியினை பருகிய படி...

#இளையவேணி கிருஷ்ணா.

நாள்:11/07/25/வெள்ளிக்கிழமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...