ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 14 ஜூலை, 2025

வாழ்வின் வண்ணக் கோலமாக...


வாழ்வின் வண்ணக்கோலமாக

நீ என் காதல் நெஞ்சில் இதுவரை 

மிளிரினாய்...

ஏனோ இன்று நான் போட்ட 

காதல் வண்ணங்களை கலைத்து 

அலங்கோலத்தின் 

சுவடுகளை மட்டும் 

விட்டு விட்டு வண்ணங்களை 

சிதறடித்து என் காதலை 

கழுவி செல்கிறாய்...

உன்னோடான பிரியத்தை 

நான் அந்த கலைந்து போன 

வண்ண கோலத்தில் தேடி 

அலைகிறேன் 

நான் செய்த பாவம் என்ன 

என் கண்மணியே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/07/25/செ

வ்வாய்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...