வாழ்வின் வண்ணக்கோலமாக
நீ என் காதல் நெஞ்சில் இதுவரை
மிளிரினாய்...
ஏனோ இன்று நான் போட்ட
காதல் வண்ணங்களை கலைத்து
அலங்கோலத்தின்
சுவடுகளை மட்டும்
விட்டு விட்டு வண்ணங்களை
சிதறடித்து என் காதலை
கழுவி செல்கிறாய்...
உன்னோடான பிரியத்தை
நான் அந்த கலைந்து போன
வண்ண கோலத்தில் தேடி
அலைகிறேன்
நான் செய்த பாவம் என்ன
என் கண்மணியே...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:15/07/25/செ
வ்வாய்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக