எல்லாம் எனக்கு தெரியும் என்று
நான் நினைப்பதுமில்லை!
எதுவுமே தெரியாது என்று
நான் நினைப்பதும் இல்லை!!
இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில்
நான் ஒரு சிறு துளியாக
இந்த பிரபஞ்சத்தில் மிதக்கிறேன்!
எதை நான் அறிந்துக் கொள்ள
வேண்டுமோ அதை என்னை
உள்ளிருந்து ஆட்டுவிக்கும்
இறைவன் தக்க நேரத்தில்
எனக்கு தெரிவிப்பான்...
இதை தவிர பெரிதாக
இந்த உலகியலில் நான்
பெருத்த ஈடுபாடு கொண்டதில்லை...
இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:02/07/25/புதன்கிழமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக