ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 7 ஜனவரி, 2025

அந்த பறவையின் இறக்கையின் நிழலில் நான் பயணிக்கிறேன்...


அந்த பறவைக்கு வானில் 

தொடர்ந்து சோர்வில்லாமல்

பறக்க மட்டுமே தெரியும்!

பறப்பதை நிறுத்தி கீழே இறங்கி 

இரை தேடும் ஆர்வம் அதனிடம் 

கிஞ்சித்தும் இல்லை!

இது பற்றி ஆச்சரியமாக 

அங்கே பலரும் கிசுகிசுப்பதை கேட்டு 

நான் நகைக்கிறேன்...

இங்கே தனித்துவமான 

வாழ்வின் மகத்துவம் 

எல்லாம் வெறும் பேச்சோடு 

பலரின் முன்னால் 

அவர்கள் அளவில் 

முடித்துக் கொண்டு 

அவரவர் வழக்கமான பணிகளை 

செய்ய சென்று விடுகிறார்கள்...

அந்த பறவையோ இன்னும் 

அந்த ஆகாயத்தில் எந்தவித 

சலனமும் இல்லாமல் 

பறந்துக் கொண்டு தான் 

இருக்கிறது...

இங்கே அதன் நிலையை அடைய 

எத்தனை பேர் யோசிக்கிறார்கள் 

என்று 

எனக்கு நானே கேட்டுக் கொண்டு 

அந்த பறவையின் இறக்கையின் 

நிழலில் 

பயணிக்கிறேன் என்றோவொரு நாள் 

நானும் அந்த நிலையை 

அடையக் கூடும் என்று!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 08/01/25

விடியல் பொழுதில் ...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...