ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 28 ஜனவரி, 2025

ஒரு மீனவனின் இறப்பு கண்டுக் கொள்ளப்பட...


தேர்தல் நெருங்குகிறது!

ஒரு மீனவனின் இறப்பு 

கண்டுக் கொள்ளப்பட 

இங்கே ஒரு தேர்தல் அவசியமாகிறது!

அங்கே எத்தனையோ மீனவனின் 

உயிர் கதறல் 

மண்ணுக்குள் புதையுண்டு 

அழுகி கிடக்கும் போது 

இங்கே ஒரு மீனவனின் 

இறப்பு பற்றிய அரசாங்கத்தின் 

கண்டன அறிக்கை 

அவர்கள் கதறலுக்கு

போதுமானதாக இருக்கிறதா என்று 

பல கேள்விகள் 

அந்த சமுத்திர நண்பனுக்கு 

எழுந்த போதும் 

அந்த அலை🌊 எனும் 

சிறு நட்பு கூட்டம் ஓயாமல் 

தமது கண்டனங்களை பதிவு 

செய்துக் கொண்டே வருவதை 

இங்கே அறிவிலிகளின் 

யானை போன்ற 

பெரும் காதுகளில் ஒலித்திருக்க 

நியாயமில்லை தானே 🔥😏.

#ஒருமீனவனுக்கானநீதி.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 28/01/25/செவ்வாய் கிழமை.

இரவின் நிழலில் எழுதியது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...