ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 15 ஜனவரி, 2025

அவர்களை வெறுமனே வேடிக்கை பார்த்து நகர்கிறேன்...


ஒன்றும் இல்லாத ஆயிரம் ஆயிரம் 

விசயங்களுக்கு 

ஆயிரம் ஆயிரம் விமர்சனங்கள் 

அங்கே அவர்களால் 

வைக்கப்படுகிறது...

இங்கே அதை பார்த்துக் கொண்டே 

நகைப்போடு மெல்ல 

நகர்கிறது காலம்...

நானும் கூட காலத்தின் 

மெல்லிய விரல்களை 

பிடித்துக் கொண்டே 

அவர்களை வெறுமனே 

வேடிக்கை பார்த்து நகர்கிறேன் 

சிறு குழந்தையாக...

காலமோ எனது வேடிக்கையை 

ரசித்துக் கொண்டே 

எனை அழைத்துச் செல்கிறது

எந்த விசய சுகங்களிலும் 

எனை தொலைத்து விடாமல் 

கண்ணும் கருத்துமாக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/01/25/புதன் கிழமை.

அந்தி மயங்கும் வேளையில்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...