ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 12 அக்டோபர், 2022

அந்த விசும்பலின் சத்தம்


கொஞ்சம்

உங்கள் வாழ்வின் சுவை

தீர்வதற்கு முன்பே

நன்றாக 

ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்

இங்கே 

ஓடிக் கொண்டே இருப்பதால் 

உங்கள் ஆனந்தமான தருணத்தை

ஆலையில் இட்ட கரும்பை போல

துன்புறுத்துகிறீர்கள்...

அதன் மௌனமான வலியை

உங்களால் 

உணர முடியவில்லையா?

எப்படி உணர்வீர்கள்

நீங்கள் தான் கண் மண் தெரியாமல்

ஓடுவதிலேயே குறியாக

இருக்கிறீர்களே...

ஆனந்தத்தை தேடி ஓடுவதாக

சொல்கிறீர்கள்..

ஆனால் ஆனந்தமோ 

நீங்கள் ஓடிக் கொண்டிருக்கும் 

காலடியில் சத்தம் இல்லாமல்

நசுங்கி சிறு விசும்பலை

வெளிப்படுத்துகிறது..

நீங்கள் ஆரவாரமாக ஓடிக் 

கொண்டிருக்கும் போது 

எப்படி அந்த விசும்பலின்

சத்தம் உங்கள் செவிகளுக்கு கேட்கும்

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...