ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 4 ஆகஸ்ட், 2018

ரசனைகள்

அன்பர்களே வணக்கம்.
           இப்போது நாம் பார்க்க இருப்பது ரசனை.என்ன நேயர்களே நீங்கள் தயார் தானே உங்களின் ரசனைகளை பகிர்ந்து கொள்ள. ஆனால் உங்களுக்கு ஒரு நிபந்தனை. நீங்கள் உங்கள் தரமான அடுத்தவர்களும் அதை கேட்டு ரசிக்க வேண்டும். இந்த ஒரு நிபந்தனை ஏற்றுக்கொள்ள தயார் என்றால் உங்கள் ரசனைகளை இங்கே பகிருங்கள் நேயர்களே.
          நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனைகள் இருக்கும். சிலபேர் ரசனைகள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.சிலபேர் ரசனைகள் நமக்கு கோபத்தை ஏற்படுத்தும்.இன்னும் சில பேர் ரசனைகள் நமக்கு வேடிக்கை காட்டி செல்லும். சிலபேர் ரசனைகள் நமக்கு பேரதிர்ச்சி கொடுக்கும்.இப்படி ரசனைகள் பலவிதம்.மனிதர்கள் எத்தனை விதமோ அத்தனை விதம் ரசனைகள் என்று சொன்னால் மிகையில்லை.
      சரி இப்போது விசயத்திற்கு வருவோம். இப்போது சமீபத்தில் நான் கண்ட காட்சி எனக்கு மிகவும் மனவேதனையும் கண்களில் கண்ணீரையும் வரவழைத்து விட்டது.இந்த மாதிரி ரசனைகள் அதுவும் சிறுவர்களிடையே எப்படி தோன்றுகிறது என்று எனக்கு ஆச்சரியம் கலந்த பயத்தை தவிர வேறு எதையும் கொடுக்கவில்லை.
        அது என்ன என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழாமல் இல்லை. அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு தான் இந்த ரசனை பதிவு. கேளுங்கள்.சில சிறுவர்கள் ஒரு நாயின் முதுகில் அவர்கள் புத்தக பையை மாட்டி அதற்கு உடையையும் போட்டு அவர்கள் சுமக்க வேண்டிய உணவு பை தண்ணீர் பாட்டில் என்று சகலமும் அதன்  மேல் மாட்டி அது கதற கதற ஆளுக்கொருப்பக்கம் பிடித்துக்கொண்டு இழுத்து செல்கிறார்கள் தெருவில். அதுவும் சும்மா இல்லை. அதை அடித்துக்கொண்டே.இது எவ்வளவு பெரிய பாவசெயல்.அந்த ஜீவன் ஏன் என்ன பாவம் செய்தது.இது யாருடைய குற்றம் என்று கொஞ்சம் சொல்லுங்கள் நேயர்களே. நாம் அந்த சிறுவர்களுக்கு ஜீவகாருண்யம் பற்றி சொல்லி கொடுக்காததே காரணம். அப்படி தானே.ஏன் வீட்டில் இதை பற்றி எல்லாம் சொல்லி கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று எனக்கு புரியாத புதிராக உள்ளது.
        தரமான விசயங்களை பேசி சிறுவர்களை வழிநடத்த மறந்த நாம் தான் முதல் குற்றவாளி. மேலும் அப்படி செய்ததை படம் பிடித்து சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு மற்றவர்களிடம் ஆயிரமாக பரவவிடுவது சமுதாய குற்றம் என்பதை நாம் அவர்களுக்கு புரிய வைத்து இனி அதுபோல காரியத்தை செய்தால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று சொல்ல வேண்டும்.
        நாம் குடும்பத்தில் கூட தரம் தாழ்ந்த விசயங்களை பேசி ரசிக்க கூடாது. ஆயிரம் ஆயிரம் ரசனைகளை இயற்கை அன்னை நமக்கு இந்த பூமியில் கொட்டி கொடுத்திருக்க நாம் அதை மெல்ல மெல்ல அழித்து விட்டதால் வந்த வினை இது.விஞ்ஞான வளர்ச்சி எப்படி வேண்டும் என்றாலும் இருந்தாலும் நாம் அந்த விஞ்ஞான வளர்ச்சியை சரியாக பயன்படுத்தாவிட்டால் நாம் கண்டிப்பாக நாகரிக கோமாளிகள். விஞ்ஞான கோமாளிகள். இப்படி சொல்வதை தவிர வேறுவழியில்லை.
           பெண்களை கேவலமாக படம் எடுத்து ரசிப்பது.இதெல்லாம் நல்ல ரசனையா?.சொல்லுங்கள் நீங்களே.இந்த ரசனைகள் மிகவும் தரம்தாழ்ந்த ரசனை இல்லாமல் வேறு என்ன?தயைகூர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய நாமே மிகவும் கேவலமான காரியங்களில் ஈடுபட்டால் நமது வருங்கால சந்ததி எவ்வாறு நம்மை எடைப்போடும்.
    கையில் மிக எளிமையாக விஞ்ஞானம் இருக்கிறது என்றால் அதை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தி உங்கள் வளர்ச்சிக்கு அதை பயன்படுத்த தெரிந்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்.உங்கள் மோசமான ரசனைகளை மாற்றி நல்ல விதமாக உங்கள் எண்ணத்தை மேம்படுத்தி நல்ல ஆக்கபூர்வமான ரசனைகளை பதிவிடுங்கள். நீங்கள் ரசித்த விசயத்தை நான்கு பேர்கள் முகம் சுளிக்காமல் கேட்கும் படி இருக்க வேண்டும். இதை நீங்கள் உங்கள் கொள்கையாக வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.
      நல்ல ரசனைகளுக்கும் பங்கு உண்டு. நல்ல சமுதாயத்தை உருவாக்க நல்ல ரசனைகளுக்கும் பங்கு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்ன நேயர்களே நாம் நல்ல சமுதாயத்தை உருவாக்க ஒரு சின்ன பங்களிப்பு செய்தால் கூட போதும். உங்கள் அருகில் உள்ள சிறுவர்களிடம் நல்ல விதைகளை விதைத்து நாளைய நல்ல தலைமுறைகளை உருவாக்கலாமே.
என்ன உங்களுக்கு வேறுவேலையே இல்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நாம் சமுதாய பங்களிப்பு செய்யாமல் வாழ்ந்து விட்டு சமுதாயத்தை திட்டுவதால் ஒரு பயனும் இல்லை என்று உணர்ந்து இதை சொல்கிறேன். நீங்கள் கண்டிப்பாக உங்கள் சமுதாய பங்களிப்பை அளித்து நல்ல நாளைய தலைமுறையை உருவாக்குவதில் ஆனந்தம் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
   சரி நேயர்களே மீண்டும் சந்திப்போம் ஒரு ஆரோக்கியமான தலைப்பில்.அதேவரை ....🖐️🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...