ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

செலவுகள்

அன்புடையீர் வணக்கம்.
    இப்போது நாம் பார்க்க இருப்பது செலவுகள். செலவுகளை பற்றி பேசப்போகிறீர்களா?.அது நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கு தெரிய வேண்டுமா?.அதுதான் ஏகப்பட்டது ஆகுதே .அதை ஒரு தலைப்பு என்று சொல்ல வந்துவிட்டீர்கள்.ஏற்கனவே நாங்கள் மிகவும் கோபமாக இருக்கிறோம்.போய்விடுங்கள்என்று நீங்கள் என்னை துரத்தி அடிப்பது தெரிகிறது. வருமானத்திற்கு வழி சொல்லி ஒரு பதிவை போடாமல் செலவை பற்றி பேச வந்து விட்டீர்கள்.போங்கள் போய் வேலை இருந்தால் பாருங்கள் என்று முணுமுணுப்பதும் கேட்கிறது.
   சரி விசயத்திற்கு வருவோம். எப்போதும் போல நீங்கள் நினைக்கும் செலவை பற்றி நான் பேசப்போவது இல்லை. அதுதானே பார்த்தேன் என்று நீங்கள் ஒரு புன்னகை பூப்பதும் எனக்கு தெரிகிறது.
     அன்பர்களே செலவுகள் என்றால் பணம் மட்டும் தானா என்ன?.எல்லாமே செலவு தான். என்ன நீங்கள் இன்று குழப்புவதற்காகவே வந்து இருக்கிறீர்கள் போலும் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.
     செலவுகள் என்பது பலவகைப்படும்.நீங்கள் வாழ்க்கையில் நல்ல சுகத்தை ,சாப்பாட்டை ,உறக்கத்தை ,நல்ல வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கிறீர்களா?.உங்கள் புண்ணிய கர்மா அங்கே செலவழிகிறது.ஆம் நேயர்களே. புண்ணியம் அனுபவித்தால் அது அந்த அனுபவத்தை செலவாக கழிக்கிறது.இதனால் நமது புண்ணியம் செலவாகிறது.ஏன் இதை செலவு செய்ய வேண்டும்?.நான் இதை சேர்த்து வைக்கிறேன் என்று எல்லாம் சொல்ல முடியாது. அதை நீங்கள் சேமித்து எல்லாம் வைக்க முடியாது. அது உங்கள் வாழ்க்கையில் எப்போதும் எல்லாம் தேவையோ அப்போதெல்லாம் செலவழிந்துக்கொண்டேதான் செல்லும்.
  சரி அடுத்து பாவம் என்ன செய்யும் என்று நீங்கள் கேட்காமலே புரிகிறது. அதுவும் நாம் படும் துன்பங்களாக கழிகிறது. நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவவினைகள் துன்பம் எனும் செலவாக கழிகிறது. இதையும் நாம் அனுபவித்து தான் தீர்க்க வேண்டும். இல்லை இல்லை முடியாது என்று சொல்லி தப்பிக்க எல்லாம் முடியாது. அது உங்களுக்கே தெரிந்தது தான்.
   ஆக பாவம் புண்ணியம் இரண்டும் செலவுகள்.முன்ஜென்மத்தில் சேமித்து வைத்த முதலீடுகளை இந்த ஜென்மத்தில் நாம் அனுபவித்து தீர்க்க வேண்டும். ஆக எல்லா வகை கர்மாவும் சேரும் பிறகு செலவுகளாக அழியும். இவை ஒரு வட்டம் போல.தொடக்கமும் முடிவும் இல்லாதது.இதை புரிந்து கொண்டால் எதை சேமிக்க வேண்டும்?எதை விட வேண்டும்?என்று உங்கள் அனைவருக்கும் புரியும்.
     நான் மேலே சொன்ன கணக்குகளை புரிந்து நடந்தால் ஆனந்தமான வாழ்க்கை வாழ்வதற்கு தடை ஏது?.
       சரி நேயர்களே!மீண்டும் மற்றொரு பதிவில் நாம் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.🖐️🖐️🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...