ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 22 ஆகஸ்ட், 2018

ஊன்றுகோல்

அன்புடையீர் வணக்கம்.
        இன்று நாம் பார்க்க இருப்பது ஊன்றுகோல். நாம் அனைவரும் ஒருகாலத்தில் தேடுவது தேடப்படுவது.அப்போது தான் அதன் அருமை புரியும். எந்த பொருளின் அருமையும் அதன் தேவை ஏற்படும் போதுதானே  நமக்கு தெரியும். இது இயல்பு தானே அன்பர்களே!
        ஆனால் நான் இப்போது கூற இருப்பது அந்த ஊன்றுகோலைப்பற்றி அல்ல. அது தேவைப்படும் போது பார்த்து கொள்ளலாம். இப்போது பார்க்க இருப்பது நமது நம்பிக்கை எனும் ஊன்றுக்கோலை.தைரியம் என்ற ஊன்றுகோலை.மனோவலிமை எனும் ஊன்றுகோலை.இன்னும் நிறைய....
       நாம் சோர்ந்து விழும்போதெல்லாம் ஒரு கை நமக்கு ஊன்றுகோலாக தேவைப்படுகிறது.அந்த கை வேறு ஒன்றும் இல்லை. நம்பிக்கைதான் அந்த கை.இந்த கையை இழந்து விட்டால் நம்மை தூக்க எத்தனை கைகள் வந்தாலும் நம்மை காப்பாற்ற இயலாது. அதனால் எந்த சூழலிலும் நாம் நமது நம்பிக்கை எனும் ஊன்றுகோலை பிடித்து எழுந்து நிற்க வேண்டும். அப்போது தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும்.
அதைவிட்டு விட்டால் நாம் பலம் இழந்தவர்கள் ஆவோம். ஆதலால் மனித கைகள் நம்மை தூக்க வரவில்லை என்ற கவலை விடுத்து நமது நம்பிக்கை எனும் கையை ஊன்றி எழுந்து கம்பீரமாக நிற்போம். என்ன நேயர்களே. நான் சொல்வது சரிதானே?
      அடுத்து நாம் பார்க்க இருப்பது தைரியம் எனும் ஊன்றுகோலை ஊன்றி நாம் நினைத்ததை சாதிக்க வேண்டும். தைரியம் எனும் ஊன்றுகோல் நமக்கு கடைசி வரை துணையாக வைத்துக்கொள்ள வேண்டும். இவர் தான் நமது முக்கிய உறவு என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த கலியுகத்தில் நம்மை எந்த நேரத்தில் எவரும் கைவிடுவார்கள் என்று நமக்கு தெரியாது. ஆனால் தைரியம் எனும் உறவு மட்டுமே நம்முடைய உண்மையான உறவாக எப்போதும் நம்முடன் பயணிக்கும். அதனால் நீங்கள் முதலில் மற்ற உறவுகளை மிக முக்கியத்துவம் கொடுத்து கவனிப்பதை இந்த தைரியம் எனும் உறவு சிறிது நகைப்போடே உங்களை நோக்கும். ஏன் என கேட்கிறீர்களா?.எப்போதும் கூடவே இருக்கப்போகும் உறவான என்னை விடுத்து இவர்கள் ஏன் போலி உறவுகள் பின்னால் நாய்க்குட்டி போல போகிறார்கள் என்று.
               நாம் அடுத்து பார்க்க இருப்பது மனோவலிமை எனும் ஊன்றுகோலை. இந்த மனோவலிமையை எப்போதும் நமது நண்பனாக கருத வேண்டும். அப்போது தான் அவன் நமக்கு தேவைப்படும் போது நம்மை உயிராக பேணி காப்பான். இந்த ஒரு நண்பனை நீங்கள் பக்கத்தில் வைத்துக்கொண்டால் போதும். உங்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பான்.எப்போதும் நண்பனுக்கு ஒரு தனி இடம் ஒன்று உண்டு தானே. அந்த இடத்தை நிரப்ப போவது நமது மனோவலிமை எனும் தோழன். நாம் இந்த தோழமையை நன்றாக பேணிகாத்து வந்தால் நாம் நமது வாழ்க்கையைசுபிட்சமாக வைத்துக்கொள்ளலாம்.நமது வாழ்க்கை சுபிட்சமாக இருப்பதை பார்த்து உண்மையான சந்தோஷத்தை அடைவது நமது உண்மையான நண்பன் தானே.
     ஆக நாம் இந்த ஊன்றுகோலை துணையாக கொண்டால் நிச்சயமாக கவலை இல்லாத ஆனந்த வாழ்வு நிச்சயம். என்ன நேயர்களே நான் சொல்வது சரிதானே?.
    சரி நேயர்களே நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவை போட்ட திருப்தியில் சென்று வருகிறேன். மீண்டும் மற்றொரு பதிவில் உங்களை சந்திக்கும் வரை🖐️✋🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...