ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 29 ஜூலை, 2018

தவறுகள்

அன்புடையீர் வணக்கம்.
       இப்போது நாம் பார்க்க இருப்பது தவறுகள். நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதோவொரு வகையில் தவறுகள் செய்வது இயல்பான ஒன்று தான்.ஆனால் லவறுகளை திருத்திக்கொள்ளாமல் இருப்பது தான் தவறு.
       ஒரு செயலை செய்கிறோம். அதில் ஏதோ தவறு ஏற்பட்டால் அதை நாம் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அது மீண்டும் நிகழாதவாறு நாம் பார்த்து கொள்ள வேண்டும்.
இன்னொரு விசயம் என்னவென்றால் நாம் வெற்றி பெறும் போது நமது வெற்றிகளை மட்டுமே பொது இடங்களில் வெளிப்படுத்துகிறோம்.ஆனால் அது தவறானது .உண்மையிலேயே நாம் ஒருவரை முன்னேற்ற நினைத்தால் நமது வாழ்க்கையில் நிகழ்ந்த அனுபவங்களை தவறுகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதுதான் நாம் பிறருக்கு செய்யும் மகாபெரிய வழிகாட்டி.
       அதைவிடுத்து நாம் சரியாக நமது விளக்கத்தை பகிராமல் போனால் நாம் சமுதாயத்திற்கு மறைமுகமாக வஞ்சித்ததாகவே அர்த்தம். ஒரு விசயம் நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். எந்த வெற்றியும் தவறுகள் இல்லாமல் பெறப்படுவது இல்லை.
          உங்கள் குழந்தைகள் நடக்க பழகும் போது எத்தனை முறை விழுந்து விழுந்து தானே எழுகிறது. நீங்களும் உங்கள் குழந்தைகள் தவறு செய்யும் போது அவர்கள் குறைகளை சுட்டி காட்டி சுட்டி காட்டி நோகடிக்காதீர்கள்.மாறாக அவர்கள் குழந்தையாக இருந்தபோது எத்தனை முறை விழுந்து விழுந்து தான் எழுந்தாய்.கவலைப்படாதே.தவறுகள் நிரந்தரம் இல்லை என்று சொல்லி புரியவையுங்கள்.
        அதைவிடுத்து பக்கத்துவீட்டு பிள்ளையோடு அவர்களை ஒப்பிட்டு நீ ஏன் இதை செய்வதற்கு இவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறாய்.அவனை பார்.கற்பூரப்புத்தி அவனுக்கு. நீயும் தான் இருக்கிறாயே.எப்போது பார்த்தாலும் ஏதாவது தவறு செய்து கொண்டு இருக்கிறாய்.நீ ஒரு முட்டாள். நீ எதற்கும் லாயக்கில்லாதவன் என்று சொல்லி கொண்டே இருந்தால் அந்த வார்த்தைகள் அவன் காதில் அடிக்கடி விழுந்து அது அவனையும் அறியாமல் மனதின் ஆழத்தில் பதிந்து அவன் திறமையை செயல்திறனை குறைக்கிறது.
          எல்லா பிள்ளைகளும் ஓரே வகையான திறன் உடையவர்கள் இல்லை. இதை நீங்கள் மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.உங்கள் பிள்ளைகளின் செயல்திறனை வளர்ப்பதை விடுத்து மாறாக இருக்கும் செயல்திறனை குறைக்கும் வேலையில் நீங்கள் இறங்கக்கூடாது.
           பெற்றோர்களே நீங்கள் தவறுகள் செய்யாமல் எந்த விசயத்தையும் சாதித்து விடவில்லை. இன்னும் சொல்ல போனால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் தவறுகளை அடிக்கடி சுட்டிக்காட்டி குத்தி காட்டாமல் ஊக்கம் தரும் வார்த்தைகளை தர வேண்டும். ஊக்கம் தரும் வார்த்தைகளை தராவிட்டாலும் பரவாயில்லை.மனதை காயப்படுத்தாமல் இருங்கள் போதும். அவன் அவன் தவறை உணர்ந்து திருத்தி கொண்டு முன்னேறிசெல்வான்.
      எதிர்காலத்தை எல்லா குழந்தைகளுமே ஏதோவொரு கனவோடுதான் எதிர்கொள்கிறார்கள்.அவர்கள் கனவிற்கு துணை நின்று அவர்கள் தவறுகள் செய்யும் போது ஒரு தோழனை போல இருந்து திருத்தி கொள்ள உதவுங்கள். உங்கள் குழந்தைகளை ஆனந்தமாக அவர்கள் இலட்சியத்தை சாதிக்க விடுங்கள். நீங்களும் அவர்கள் சாதனைகளில் பங்கு கொண்டு ஆனந்தமாக இருங்கள். ஆனந்தம் என்பது ஒவ்வொரு சின்னச்சின்ன விசயத்திலும் உள்ளது. வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...