ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 18 ஜூலை, 2018

தடைகள்

அன்பர்களே வணக்கம்.
    இன்று நாம் பார்க்க இருப்பது நம் வாழ்வில் ஏற்படும் தடைகள். தடைகள் இல்லாத வாழ்க்கை என்பது ஏது.தடைகளை கடந்தால் தான் மிகவும் நல்ல விசயங்களை நம்மால் சாதிக்க முடியும். சிலர் ஒரே முயற்சியில் தான் நினைத்ததை சாதிக்க நினைப்பார்கள். அது எப்படி சாத்தியமாகும். அப்படியே சாத்தியப்பட்டாலும் நமக்கு அனுபவமஅனுபவம் கிடைக்காது.சுவாரஸ்யமான சம்பவங்களுக்கு இடம் இல்லாமல் போய் விடும்.அதாவது முதல் முயற்சியிலேயே எடுத்த காரியத்தை சாதித்து விட்டால்.
  பலர் எவ்வளவு முயற்சி செய்தாலும் காரியம் தடைப்பட்டுக்கொண்டே இருக்கும். அவர்கள் அந்த தடைகள் எதனால் ஏற்பட்டது என்று ஆராய முற்படுவதில்லை.அந்த காரணத்தை கண்டறிய முயல்வதில்லை.ஒரு காரியத்தை சாதிக்க விடாமுயற்சி வேண்டும். விடாமுயற்சியாலேயே பல காரியங்கள் இங்கு சாதிக்கப்பட்டுள்ளது.
        ஒரு காரியத்தை எந்த நேரத்தில் எடுக்கிறோம் என்பதை ஆராய வேண்டும். எந்த சூழ்நிலை அதற்கு ஒத்து வரும் சரியான திட்டமிடுதலும் அவசியம். திட்டமிடாத காரியம் கடிவாளம் இல்லாத குதிரை போலத்தான். தறிகெட்டு ஓடும். அதனால் திட்டமிடுதலை சரியாக செய்து சரியான பாதையில் செல்ல தீர்மானிக்க வேண்டும்.
     ஒரு காரியத்தை தேர்தெடுப்பதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்கலாம். ஆனால் தேர்ந்தெடுத்தபின் மற்றவர்களின் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் முன்னோக்கி செல்ல வேண்டும். சிலர் அவர் மேற்கொண்ட காரியத்தை பிறர் கேலி செய்யும் போது பாதியிலேயே விட்டு விடுவார்கள். எந்த காரியத்தை செய்தாலும் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதை எல்லாம் நாம் கண்டு கொள்ள கூடாது. விமர்சனங்களை ஒன்று கண்டுக்கொள்ளக்கூடாது அல்லது விமர்சனங்களை நாம் தாங்கிக்கொள்ள வேண்டும். இது இரண்டும் இல்லை என்றால் நீங்கள் எடுத்த காரியத்தை சாதிக்க இயலவே இயலாது.
           இன்னொரு விசயத்தையும் உங்களுக்கு நான் சொல்ல விருப்பப்படுகிறேன்.உங்களுக்கு எந்த காரியத்தை பிடிக்குமோ அதை தேர்தெடுங்கள்.ஏனெனில் பிடித்த விசயத்தில் ஈடுபடும் போது நமக்கு தடைகள் தெரியாது.சோர்வு தெரியாது. முக்கியமாக இதை செய்யும் போது நீங்கள் மற்றவர்கள் விமர்சனங்களை நீங்கள் கண்டுக்கொள்ள மாட்டீர்கள்.
        தடைகள் என்றுமே உங்களுக்கு ஒரு சிறுதேர்வுதானே தவிர அதனால் நீங்கள் சோர்ந்து விடக்கூடாது. சோர்வு ஏற்பட்டுவிட்டால் நீங்கள் தொடங்கிய காரியம் பாதியிலேயே பின்னப்பட்டுவிடும்.அதனால் தடைகளை கண்டறிந்து அதை நீக்கும் வழிகளை கண்டுபிடித்து முன்னேறி செல்லுங்கள். வெற்றி கனி உங்கள் கைகளில் வந்து தானாக விழும்.
       என்ன நேயர்களே .உங்களுக்கு பிடித்த வேலைகளில் ஈடுபட்டு வெற்றி பெற தொடங்கி விட்டீர்கள்தானே.இனி உங்கள் வாழ்க்கையில் ஆனந்தம் தாண்டம் ஆடும்.
      வாழ்த்துக்கள் எடுத்த காரியத்தை சாதிப்பதற்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...