ஆனந்தமாக வாழுங்கள்
வாழ்க்கை பற்றிய புரிதல்
திங்கள், 16 ஜூலை, 2018
தானம் செய்யுங்கள்
அன்பர்களே வணக்கம்.
இன்று நாம் பார்க்க இருப்பது தானதர்மங்கள்.இன்று பெரும்பாலானவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள்.ஆனால் தர்ம சிந்தனை இல்லை. அப்படியே இருந்தாலும் வெறும் விளம்பரத்திற்காக செய்கிறார்கள். நிறைய சம்பாதித்தால் அதை நமது குடும்ப உறுப்பினர்களுக்கே செலவு செய்கிறார்கள்.
சிலப்பேர் தேவை இருக்கிறதோ இல்லையோ நிறைய செலவு செய்து பணத்தை வீணடிக்கிறார்கள்.இதை தட்டிக்கேட்டால் ஸ்டேடஸ் அது இது என்று பிதற்றல்கள் இருக்கும். ஏன் அந்த தேவையில்லாத ஆடம்பரமான செலவை குறைத்து கொண்டு நாலு ஏழை பிள்ளைகளை படிக்க வைத்தால் அந்த பிள்ளைகள் வாழ்க்கையில் கல்வி ஒளி ஏற்றக்கூடாது.
உனக்கு இறைவன் அபரிதமான செல்வம் கொடுத்து இருக்கிறார் என்றால் அதை உன்மூலம் நாலுபேர் நன்மை அடைவதற்கு தான். அதை உங்கள் இஷ்டத்துக்கு செலவுகள் செய்து லட்சுமியை அவமானம் படுத்தக்கூடாது.
உங்கள் தேவைகளை குறைத்து வாழுங்கள். நீங்கள் உங்கள் அபரிதமான செல்வத்தை நன்கு தானதர்மங்கள் செய்யுங்கள். கல்வி கொடுங்கள். நிறைய சேவைகளை அந்த செல்வத்தை வைத்து செய்யுங்கள்.
நீங்கள் இந்த செல்வத்தை எப்படி சேலவு செய்கிறீர்கள் என்று இறைவன் பார்த்து கொண்டு இருக்கிறார் என்பதை ஞாபகம் வையுங்கள்.
தானதர்மத்தில் ஈடுபாடு கொண்டு அடுத்தவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.அதில் தான் உங்கள் ஆனந்தம் அடங்கியுள்ளது.வாழ்த்துக்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
-
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
-
ஆயிரம் ஆயிரம் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத கேள்விகளால் இந்த உலகம் எனை ஆக்கிரமிக்கும் பொழுது நான் என்ன விடை பகிர்ந்து விட போகிறேன் என்...
-
வேறு எதுவும் அடைக்கலம் கிடைக்கவில்லை என்று உறுதி செய்து சோர்ந்து அமரும் தருணத்தில் அந்த பெரும் துயரத்தின் மரத்தின் நிழலொன்று அடைக்கலம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக