ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 22 ஜூன், 2026

நான் என்பது யாரோ பெரும் திரளினிலே...


கண்ணாடி பார்த்து 

எத்தனை நாட்கள் ஆகிறது 

உங்கள் முடி நரைத்து இருப்பதை 

கவனிக்கவில்லையா என்று 

அங்கே ஒருவர் 

என்னை உரையாடல் நடுவில் 

சிரித்தபடியே கேட்கிறார்...

நிச்சயமாக எவ்வளவு காலம் 

என்று தெரியவில்லை எனக்கு 

என்று நான் சொல்வதை பார்த்து...

அவர் விசித்திரமான பார்வை 

ஒன்றை 

என் மீது வீசி விட்டு 

ஏன் என்று கேட்டார்...

நீங்கள் நினைப்பது போல 

என் முகமோ அல்லது உடலோ 

நான் இல்லை என்று 

நன்றாக எனக்கு தெரிந்து 

இருக்கும் போது 

எனக்கு கண்ணாடி பார்க்கும் 

அவசியம் தான் என்ன என்று 

கேட்டதும் சற்றே யோசித்து 

அமைதியாக பதிலேதும் 

பேசாமல் போய் விட்டார்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/06/26.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...