ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 12 ஜூன், 2026

உதிர்ந்த இலையின் பயணம்..


தன் இறுதி பயணத்தை 

தொடங்கிய அந்த இலையை 

பிரிய மனமில்லாமல் 

கிளை எனும் கையை கொண்டு 

முடிந்தளவு 

தன்னோடு அணைத்துக் கொள்ள 

பார்க்கிறது 

அந்த மரம் எனும் தாய்...

அதுவோ சுக பிரம்மம் போல 

எந்த உணர்வுகளையும் 

வெளிப்படுத்தாமல் பயணிக்கிறது...

மண்ணோடு 

புதைந்துக் கொள்வதற்கு முன் 

ஒரேயொரு செய்தியை 

தகுதி வாய்ந்தவரிடம் 

பகிர்ந்து விட வேண்டும் என்று 

தீவிரமாக தேடும் போது 

அங்கே ஒரு குயிலின் சிறகு 

தன் மீது உராய்ந்த அதிர்வில் 

அதன் மீது அந்த செய்தியை 

கடத்தி விட்டு 

மண்ணில் புதைந்து 

ஆனந்தலயமாக 

எத்தனிக்கும் போது 

அந்த இலையின் இறுதி சடங்கை 

எங்கிருந்தோ வந்த 

அதன் மூதாதையரின் 

தென்றல் காற்றில் 

சிறு அசைவை மட்டும் 

வெளிப்படுத்தி அமைதிக் கொள்கிறது 

அந்த இலை...

#உதிர்ந்த #இலையின் #பயணம் 

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...