#இன்றையதலையங்கம்:-
ஒரு அரசாங்கம் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற தெளிவு இல்லை என்றால் அந்த அரசாங்கம் இருந்தும் மக்களுக்கு பயனில்லை.. எத்தனையோ டாஸ்மாக் கடைகளை திறந்து மக்களின் உயிரை பறிக்கும் அரசாங்கம் மக்களின் உயிரை இந்த மண்ணில் நிலைநாட்ட மண்ணோடு மண்ணாகி போராடி நெல்மணிகளை தனது வியர்வை சிந்தி விளைவித்து அரசாங்கத்தின் கொள்முதலுக்காக கொண்டு வந்தால் ஈரப்பதத்தை காரணம் காட்டி இப்படி மழையில் நனைய விட்டு விவசாயியின் உழைப்பையும் பசியை தீர்க்கும் அமுதமான நெல்மணியினையும் அவமானம் செய்வது மக்களின் பசியை ஒரு பொருட்டாக கவலைக் கொள்ளாமல் இருப்பது தானே பொருள்... நெல்மணிகளை கொள்முதல் செய்து பாதுகாக்க கட்டிடம் கட்ட வேண்டும் தோன்றவில்லை... ஆனால் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சுதந்திர தின கொடியை ஏற்றி வீர வாசனங்களை நாளை மறுநாள் பேசுவார்கள்... இது தான் மாபெரும் விவசாய தொழிலை செய்து வரும் விவசாயிகளுக்கு அவர்கள் கொடுக்கும் பரிசு... எந்த ஒரு நாடு விவசாயியை மதிக்காமல் இருக்கிறதோ அந்த நாடு விரைவில் அழிவை சந்திப்பது திண்ணம்...
#விவசாயிகளின்
#கண்ணீர்மழைநீரில்
#கரைகிறது.
#இன்றையதலையங்கம்.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:13/08/25/புதன்கிழமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக