ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 7 ஏப்ரல், 2025

வாழ்வின் சூட்சுமங்கள் எல்லாம்...


காற்றில் தன் தேகத்திற்கு 

எந்த பிடிமானமும் கிடைக்காதா 

என்று 

தேடி அலைகிறது 

அந்த சிறிய கொடி...

வெகுநேரம் அந்த கொடியின் 

தேடலில் 

புரிந்துக் கொண்டது 

ஒன்றேயொன்று தான்...

அந்த காற்றின் சூட்சம தழுவலே 

தனக்கான பிடிமானம் என்று...

வாழ்வின் சூட்சுமங்கள் எல்லாம் 

கட்புலனாகாத

அந்த காற்றில் 

ஒளிந்துக் கொண்டு 

நமக்கு காட்டும் 

வேடிக்கையை இங்கே 

யார் அறியக் கூடும்??

#இளையவேணிகிருஷ்ணா.

#காலைகவிதை.

நேரம்:பகலவனின் உதய வேளையில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...