ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 12 ஏப்ரல், 2025

வாழ்வின் பேராசை பசியில் சிக்காமல் பயணிக்கும் பயணி நான்...


ஒரு அற்புதமான விடியல் எப்போதும் 

சில பறவைகளின் 

மெல்லிய சத்தத்துடன் தான் 

துவங்குகிறது...

இலேசான குளிர் காற்றில் 

முழு வாழ்வின் பேரானந்த 

சுவையையும் 

இங்கே நாம் உணர்ந்து விடும் 

தருணத்தில் தான் 

ஜென் நிலைக்கு நம்மையும் 

அறியாமல் கடத்தப்படுகிறோம்...

அதோ அங்கே கத்திக் கொண்டே 

பறக்கும் பறவையின் 

இறகின் நிழலில் நான் இளைப்பாற 

முடிகிறது ஏதோரு தொந்தரவும் 

இல்லாமல் 

இங்கே...

வாழ்வின் பேராசை பசியின் 

அகப்படாமல் பயணிக்கும் நான் 

எப்போதும் என்னை...

என்னை சுற்றி நடக்கும் 

இயற்கையின் 

அசைவை அசைப்போட்டு 

பயணிக்கும் விஷேச பயணி நான்...

காலை கவிதை 🎉.

நாள் 13/04/25/ஞாயிற்றுக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...