ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 31 டிசம்பர், 2024

இன்று போல தான் நாளையும் இருப்பேன்...


இன்று போல தான் 

நாளையும் இருப்பேன்...

யுகம் யுகமாக 

உற்சாகமாக பயணிக்கும் எனக்கு 

இந்த சிறு துளி 

காலத்தின் வரையறைகள் 

எதுவும் செய்ய போவதில்லை..

நான் நானாக பயணிக்கும் வரை...

ஒரு நதியின் பேரமைதியை போல 

சலனமற்று தொடரும் 

என் பயணத்தில் எந்த கால தேசமும் 

எல்லை இல்லை...

நான் நானாக எப்போதும்...

#இரவு கவிதை🎻 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:31/12/24/செவ்வாய் கிழமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...