ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 26 டிசம்பர், 2024

அந்த ஒற்றை சொல்லை விட்டு இருந்தால்...


ஒன்றும் இல்லை என்று 

ஒரே சொல்லை சொல்லி சொல்லி 

ஆயிரம் யுகங்களை 

கடந்து விட்டேன்...

அந்த ஒரு சொல்லை 

நான் மறந்து இருந்தால் 

இன்று நான் ஒரு அபூர்வ உலகத்தை 

சிருஷ்டித்து இருந்திருக்கக் கூடும்...

அங்கே எந்தவித கல்மிஷமும் 

இல்லாத 

மனிதர்கள் இருந்திருக்கக்கூடும் 

என்றேன் 

அந்த காலத்திடம்...

காலமோ அதை விட இது தான் உனது 

ஆழ்ந்த துக்கத்தின் கீறல்களாக 

 உனது மனவலிமையின் 

தகர்க்க முடியாத 

இரும்பு கலசத்தின் உறுதியை

நான் பல யுகமாக உணர்ந்து வருகிறேன்...

இதோ பார் உனது துக்கத்தின் 

கீறல்கள் ...

எனக்கு ஏற்படுத்திய வலியின் 

இரத்த கசிவு 

இன்னும் நிற்காமல் 

என் உடல் எங்கும் 

பயணிக்கிறது என்று என்னிடம் 

அதன் உடலை காட்டிய போது 

நான் விம்மி விம்மி அழுது 

அந்த காலத்தின் தோளில் 

சாய்கிறேன்...

அந்த காலமோ என்னை மிருதுவாக 

அதன் இரு கைகளால் அணைத்து 

பெரும் காதலோடு 

மௌன மொழியில் 

ஆறுதல் சொன்னது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 26/12/24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...