ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 14 செப்டம்பர், 2024

இன்னும் பொழுது இருக்கிறது...

 


அங்கே காகம் தொடர்ந்து 

எனது வீட்டின் கூரை மீது 

அமர்ந்து வெகுநேரமாக 

கரைந்துக் கொண்டு 

இருக்கிறது ...

பாவம் அதற்கு தெரிய 

நியாயமில்லை 

விருந்தாளிகளின் வருகையை 

எனது அலைபேசி இன்னும் 

தனது கூவுதலில் எனக்கு 

தெரியப்படுத்தவே இல்லை என்று 

ஒரு வேளை காகம் 

உணர்த்தும் செய்தி 

உண்மையானால் நான் 

எனக்காக வைத்திருக்கும் 

அந்த கேழ்வரகு கூழை 

வரும் விருந்தாளிகள் மகிழ்ச்சியாக 

ஏற்றுக் கொள்வார்களா 

இல்லை என்  ஏழ்மை 

நிலைமையை பற்றி 

என் நெருக்கமான சொந்தங்களிடம் 

புறம் பேசுவார்களா 

பொறுத்து இருந்து தான் 

பார்க்க வேண்டும் 

இன்னும் பொழுது இருக்கிறது...

#ஞாயிறுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/09/24/ஞாயிற்றுக்கிழமை.

எமது உறவினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த மரண தேவனின் சிறு ஸ்பரிசத்தில்...

  அந்த மரண தேவனின்  ஒரு சிறு ஸ்பரிசத்தில்  நான் ஆங்காரமாக  அதன் தலையில் ஏறி  அமர்ந்துக் கொண்டு  அந்த சத்தமான சிரிப்பொலியை  உதிர்த்துக் கொண்ட...