ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 9 மே, 2024

பெரும் தவிப்போடு காத்திருக்கிறான் அவன்...


உள்ளேயும் வெளியேயும்

ஓடி ஓடி விளையாடும்

மூச்சுக் காற்றுக்கு தெரியாது

திக்கி திணறி தனது ஓட்டத்தில் இருந்து

விலகும் போது

எங்கே அருவமாக அலைந்து திரிந்துக் கொண்டு இருப்போம் என்று...

நிச்சயமாக எனக்கும் தெரியாது அதன் நிலை என்ன என்று...

ஆனால் இந்த ஆட வல்லவனுக்கு தெரியும்

இவள் ஒரு ஆழ்ந்த பித்து நிலையில் நம் மீது மோகம் கொண்டவள் என்று...

என் மூச்சு காற்று

ஓயும் போது இந்த உடல் கீழே வீழ்ந்து விடும் முன்

என்னை பற்றி பிடித்து

ஈர்த்து தனது

இதய கமலத்தில்

நோகாமல் இழுத்து இரண்டற கலந்துக் கொள்ளும் நொடிக்காக

அங்கே ஒருத்தன் ஏங்கி தவிக்கிறான்...

இங்கே வெறும் சம்சார கோட்டையை விட்டு விட்டு

விலகி வரும் நாளுக்காக

அவன் அங்கே பெரும் தவிப்போடு காத்திருக்கிறான்...

என் நிலைமையை இங்கே புரிந்துக் கொள்பவர்

அவனை தவிர வேறு யாராக இருக்கக்கூடும்???.

#ஆடவல்லானின்காதல்.

#இளையவேணிகிருஷ்ணா.

#ஆத்மவிசாரகவிதை.

#நாள்:09/05/24.

வியாழக்கிழமை.

முன்னிரவு 10:58.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...