ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 21 மே, 2024

தேநீர் கவிதை 🍁

 


என் ஆறுதலுக்கோ 

தேறுதலுக்கோ 

எந்த துணையையும் 

தேடியதே இல்லை...

எந்தவொரு ரணமும் 

தீராத வலியை 

கொடுத்த போதும் 

ஒரு சில நொடிகள் 

மனதிற்கான 

இளைப்பாறுதலைக் கொடுத்து 

கொஞ்சம் அதை அப்படியே 

கண் மூடி இருக்க 

சொல்லி விட்டு 

ஒரு தேநீர் கோப்பையை

அந்த மேசை மீது வைத்து விட்டு நகரும் போது 

அந்த தேநீரின் மணத்தில் 

பாதி பாரம் கரைந்து போக 

மீதி பாரத்தை அதை சுவைத்துக் கொண்டே 

அங்கே சாலையில் நனைந்து 

செல்லும் மனிதர்களை 

வேடிக்கை பார்த்து 

கரைத்துக் கொள்கிறேன்...

இன்னும் வாழ்க்கையில் சுவாரஸ்யம் 

வடிந்து விடவில்லை என்று 

என் காதருகே உரசி சென்ற 

அந்த பறவையின் சிறகில் 

இருந்து விழுந்து நனைத்த 

மழைத் துளி ஒன்றில்....

#தேநீர்கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/05/24.

செவ்வாய் கிழமை.

நண்பகல் கடந்த மணித்துளிகள் 1:07.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...