ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 3 மே, 2024

உன் சூட்சமத்தில் நான் எங்கே தொலைந்தேன்?


உன் சூட்சமத்தில்

நான் எங்கே தொலைந்தேன்

என் இருப்பு என்பதே

மாயை என்கின்ற போது 

நான் எனும் மாயையை

உன் திருவடியில் அழுத்தி...

உன் தூக்கிய திருவடியில்

என் பேரின்ப ஒளியை பாய்ச்சி 

பிறவி எனும் பெரும் காயத்திற்கு 

மருந்திட்டு

உன்னுள்

கரைத்துக் கொள்ளும் நாளும் எங்கே

ஒளிந்துக் கொண்டது என்று

வாழ்நாளில் தேடி தேடி 

தொலைகிறேன்

இந்த பேதை....

#ஆத்மசொரூபம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/05/24.

வெள்ளிக்கிழமை.

முன்னிரவு பொழுது 8:48.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...