ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

உன் கண்களில் ஒரு கவிதை காற்றில் எழுதி...

 




அன்றொரு நாள்

உன் நேசத்தின்

பிடியில் இறுக 

எனை அணைத்துக் கொண்டாய்...


அந்த ஒரே தேகம் தீண்டா

சூட்சம  உயிர் தீண்டலில்

ஈரேழு உலகையும்

மறந்து எத்தனை நாழிகை

இந்த பூமி தாய் மடியில்

கிடந்தேன் என்று

நான் அறியேன்...


மீண்டும் நான் சுய உணர்வில்

விழித்தெழுந்து சுற்றும் முற்றும்

பார்க்கும் போது

நீ காற்றலையில் கூந்தல் அசைய

என்னை திரும்பி பார்த்து


உன் இதழ் விரிய

ஒரு சிரிப்பில் முத்துக்களை

சிதற விட்டதை

நான் நிதானமாக சேகரிப்பதை

நீ பார்த்து ரசிக்கும்


அந்த உயிர் உருக்கும்

பார்வை தீண்டலில்

என் பசி தூக்கம் மறந்து

உன்னை ரசிக்கும் வேளையில்


நீ உன் கண்களில்

ஒரு கவிதை காற்றில் எழுதி

போகிறாய்..

பார்வை ஒன்றே போதுமே என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/02/26.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...