ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 4 நவம்பர், 2025

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

 


#இன்றையதலையங்கம்:

#குற்றம் செய்தவர் யார்?

கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமாக புரையோடிய போதை வஸ்து கலாச்சாரம் தான் முழுமுதற் காரணம் என்று சொல்வேன்.. அந்த பெண் தனியாக அங்கே ஏன் போகிறார் அப்படி இப்படி என்று கேள்வி எழுவதை ஒரு பக்கம் வைத்து விட்டு மிகவும் தீவிரமாக ஆராய்ந்தால் அங்கே நடந்த விஷயம் தான் கூர்ந்து கவனிக்க வேண்டும்..ஒரு பெண் ஒரு வேளை அங்கே அவரோடு வந்த இளைஞனால் பாதிக்கப்பட்டு இருந்து காவல் துறைக்கு புகார் மனு கொடுத்து இருந்தால் அந்த பார்வையில் வழக்கை எடுத்துச் செல்லலாம்.. ஆனால் அங்கே நடந்தது என்ன என்று பாருங்கள்..மூன்று இளைஞர்கள் போதையால் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அவரை கீழ்தரமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்..இதை விட்டு விட்டு வழக்கை ஆரம்பிக்கும் போதே அந்த பெண்ணை குற்றவாளியாக வைத்து காவல் துறை வழக்கை கொண்டு செல்லக் கூடாது..முதலில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை குறைத்தாலே பாதி குற்ற செயல்கள் குறைந்து விடும்... மேலும் கிராமப் புறங்கள் வரை மிகவும் மோசமான நிலையே உள்ளது இந்த விஷயத்தில்... மக்கள் ஏழு மணிக்கு மேல் அவர்கள் ஊரிலேயே நடமாட முடிவதில்லை.இது பற்றி பல நாளிதழ்களில் செய்தி வந்தாலும் ஒரு மெத்தன போக்கே உள்ளது... அந்த பெண்ணை விடுங்கள் நேற்று யூடியூப் சேனலில் ஒரு வக்கீல் கேட்கிறார் ஒவ்வொருவரும் காவல் துறை பாதுகாப்பு தர முடியுமா என்று.. முதலில் நீங்கள் சொல்வது போல முதலமைச்சர் அந்த துறையை வைத்துக் கொள்ள தான் வேண்டுமா என்று கேள்வி எழுந்தாலும் எங்கே குற்ற செயல்கள் கட்டவிழ்ந்து நடக்கிறதோ அங்கே யார் பொறுப்பு ஏற்பது என்ற கேள்வியும் எழுகிறது.. அதனால் காவல் துறை முதலமைச்சர் வசம் வைத்துக் கொள்கிறார்கள்.. ஆனால் யார் வசம் இருக்கிறது என்பது பிரச்சினை இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஆட்சியாளர்கள் இருப்பது தான் தவறு.. இது பற்றி நிறைய பேசியாகி விட்டது... காவல் துறை தமிழ் நாட்டை பொறுத்தவரை கைகள் கட்டிப் போடப்பட்டு தான் இருக்கிறது... ஏனெனில் அவர்களுக்கே நாட்டில் பாதுகாப்பு இல்லை...யாரோவர் போதையில் காவல் துறையினரை அடிக்கும் நிகழ்வு நடக்கும் போது அவர்களை என்ன செய்ய வேண்டும் என்று ஒரு நேர்மையான காவல் துறை முடிவெடுக்க முடிகிறதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை... இந்த மாநிலமும் மாநிலத்து மக்களும் மிகவும் பரிதாபத்துக்குரியவர்களாக மாறி வருகிறார்கள் என்பது தான் முகத்தில் அறைந்த உண்மை... இங்கே சாதாரண பொது மக்களுக்கு எத்தனை இடையூறுகள் போதை வஸ்துவால் சீரழிந்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களால் என்று ஆட்சியை நடத்திக் கொண்டு வரும் தலைமைக்கு உரைக்கவே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை...

பார்ப்போம் வழக்கை எப்படி எடுத்துச் செல்கிறார்கள் என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

#நாள்:04/11/25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...