அந்த அறிவிக்கப்படாத
சலிப்பொன்று
என்னுள் அகண்டு விரிந்து
ஒரு நதி போல ஓடுகிறது...
அதன் போக்கில் சிறு பிழையும்
என்னால் சொல்லி விட முடியாதபடி
ஓடி களிப்போடு நகர்கிறது...
நான் தான் இங்கே நீச்சல் தெரியாத
மனிதனாக கரையில் நின்று
அந்த நதியில் நீராட பாதுகாப்பு
கருவியாக
சிறு துரும்பாக ஏதேனும்
என் கைகளுக்கு தட்டுப்பட்டு விடாத
என்று இங்கும் அங்கும்
தேடி அலைகிறேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:23/11/25
ஞாயிற்றுக்கிழமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக