ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

சராசரி கிறுக்கர்களுக்கிடையே வாழ்ந்து விடுவது அவ்வளவு எளிதல்ல..


தினமும் எதையோ நினைத்து 

ஓடிக் கொண்டிருக்கும் 

அந்த சராசரி கிறுக்கர்களுக்கிடையே 

வாழ்ந்து விடுவது 

அவ்வளவு எளிதல்ல!

அவர்களை அப்படியே 

ரசித்து வேடிக்கை பார்த்து 

அவர்கள் நிலையையும் 

என் நிலையையும் ஒப்பிட்டு 

எதையோ எனது தாள்களில் 

கிறுக்கி ஆறுதல் தேடிக் கொண்டு அந்த காலத்தின் நிழலில் கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டு 

நான் பாட்டுக்கு சாலையில் போவோர் வருவோரை பார்த்துக் கொண்டே 

எதையோ ரசித்து 

ஹம் செய்து கொண்டு 

மன சாந்தி அடைகிறேன் 

இதையும் அங்கே பல வாழ்வை புரிந்துக் கொண்டதை போல நடித்து 

பேய் போல திரிந்துக்கொண்டிருக்கும் 

கிறுக்கர்கள் எனை பைத்தியம் என்று சொல்லி நகைக்கும் போது தான் கோபத்திற்கு பதிலாக பலம் கொண்ட மட்டும் சத்தமாக நான் சிரித்து வைத்ததில் அந்த காலமே 

அதிர்ந்து எனை நோக்கி ஓடோடி வந்து என் காலடியில் வீழ்ந்தது!

#சராசரி #கிறுக்கர்கள்

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/08/25/சனிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...