ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 2 ஆகஸ்ட், 2025

உன் மீதான காதலில்...


உன் மீதான காதலில்

அமிழ்தம் நிரம்பிய பாத்திரம் போல 

குளிர்ந்த மனது 

இன்றோ ஒரு சிறு ஊடலில் 

எரிமலை வெடித்து 

சிதறியதை போல 

எரிந்து சாம்பலாகி காற்றில் 

பறக்கிறது...

அந்த சாம்பலின் நம் காதலின் 

கருகலின் வாசத்திலேனும் 

நீ உன் ஊடலை மறந்து 

என்னை அணைத்துக் கொள்ள 

ஓடோடி வந்து விடமாட்டாயா என்று 

ஏங்கி தவிக்கும் மனதை 

தேற்றவேனும் வருவாயோ 

இல்லை மீண்டும் 

மனதை எரிய வைத்து சாம்பலை 

காற்றில் கலக்க விடுவாயோ 

சொல்லி விடு 

என் பெரும் காதலே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/08/25/ஞாயிற்றுக்கிழமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...