ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 30 ஜூன், 2025

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (7)

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (7)

அந்தி மயங்கும் வேளை தாண்டிய 

அந்த மெல்லிய இரவில் தான் 

அன்று அங்கே நடந்த மிகவும் 

முக்கியத்துவம் வாய்ந்த 

விசயங்களின் போக்குகளை 

பற்றி ஆள் ஆளாக்கு சரி என்றோ 

தவறு என்றோ 

பேசி வாக்குவாதம் செய்து 

ஓய்ந்து ஒவ்வொருவராக 

கலைந்து செல்கிறார்கள்...

அங்கே அந்த நிகழ்வை 

கூர்மையாக கவனித்து 

உண்மை தன்மையின் 

போக்கை முழுவதும் உணர்ந்த 

காலம் மட்டும் 

அங்கே அவர்கள் கூட்டாக நின்று 

பேசிய கூட்டத்தில் 

கலந்துக் கொள்ளாமல் 

வெறுமனே அவர்கள் பேசிய 

பேச்சின் கற்பனை கலந்த 

நிகழ்வை வேடிக்கையாக பார்த்து நகைத்து விட்டு 

அந்த பெரும் இருளில் கலக்கிறது...

இங்கே உண்மை எது பொய் எது 

என்று கேட்டு அறிந்துக் கொள்ள 

மனமில்லாமல் 

எதை எதையோ தன் சுவைக்கு 

தகுந்தார் போல 

பேசி களித்து களி நடனம் 

புரிபவர்கள் மத்தியில் காலம் ஏன் 

அங்கே நடந்ததை சாட்சியாக சொல்லவில்லை என்று 

என்னை போன்ற கோபம் 

கொள்பவர்களையும் 

காலம் கண்டுக் கொள்ளாமல் 

தன் போக்கில் 

இயல்பாக நிதானமாக 

பயணிப்பதை இங்கே 

என்னை தவிர எவரும் வேடிக்கை 

பார்க்கவில்லை 

என்பது தான் காலத்தின் துயரம்...

#இப்படிக்குகாற்றைநேசிப்பவள்❤️(7).

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/06/25/திங்கட்கிழமை.

அந்தி மாலை நேரம் கடந்த மெல்லிய இரவின் நொடிகளில் எழுதப்பட்ட கவிதை ❤️.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...