ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 3 ஜூன், 2025

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (3)


இந்த உலகத்தின் 

பார்வைக்காக தான் நான் 

வாழ்ந்துக் கொண்டு இருக்கிறேன் என்றால் 

நான் சுவாசிக்கும் காற்றே 

என்னை பெரும் தீ கொண்டு 

பொசுக்குகிறது...

சமூக அல்ப விவகாரங்கள் எல்லாம் 

என்னை ஈர்க்க ஆயிரம் ஆயிரம் 

முயற்சிகள் செய்து 

தோற்றுப் போனபோதும் 

பெரும் வெறிக் கொண்டு 

என் அடிமைசாசனத்தை எழுதி வாங்க 

அர்த்தஜாம பேயின் 

புத்திக் கொண்டு என்னை 

ஒரு வட்டம் போட்டு சுற்றி சுற்றி 

வருகிறது...

இங்கே என்னை ஈர்க்கும் எதையும் 

பெரும் ஆக்ரோசம் கொண்டு 

அழித்து விட்டு

கொன்று தீர்த்து 

பேரமைதிக் கொண்டு 

அந்த சூட்சம உலகில் பயணிக்க 

நினைக்கும் போது 

எங்கிருந்தோ வந்த 

அந்த அதிசய காற்றின் மென்மையில் 

நான் இழக்கிறேன் என்னை 

என்னையும் அறியாமல்...

என்ன ஏதுவென்று 

தெரிந்துக் கொள்ள நினைத்து 

கண் விழிக்கும் வேளையில் தான் 

தெரிகிறது 

நான் பெரும் மாயையின் பிடியில் 

அகப்பட்டு துடிக்கிறேன் என்று...

இங்கே எதிலும் பற்றற்று 

என்னோடு பயணிக்கும் 

ஆன்மா மட்டும் 

எதுவுமே நடக்காதது போல 

என்னை மெல்லிய புன்னகை செய்து 

என்னுள் பேரமைதிக் கொண்டு 

யோக நித்திரை கொள்ளும் போது 

நான் விழித்துக் கொள்ளலின் 

தத்துவத்தை 

உணர்ந்துக் கொண்டு 

அதிசய நித்திரையின் 

ஆட்கொள்ளலில் 

பேரமைதிக் கொள்கிறேன்...

இங்கே இந்த பிரபஞ்சத்தின் 

பெரும் தத்துவத்தை யார் அறிந்துக் கொள்ள கூடும் என்று நினைத்து...

#இப்படிக்குகாற்றைநேசிப்பவள்❤️(3).

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/06/25/செவ்வாய்க்கிழமை.

2 கருத்துகள்:

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...