ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 30 ஜூன், 2025

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (7)

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (7)

அந்தி மயங்கும் வேளை தாண்டிய 

அந்த மெல்லிய இரவில் தான் 

அன்று அங்கே நடந்த மிகவும் 

முக்கியத்துவம் வாய்ந்த 

விசயங்களின் போக்குகளை 

பற்றி ஆள் ஆளாக்கு சரி என்றோ 

தவறு என்றோ 

பேசி வாக்குவாதம் செய்து 

ஓய்ந்து ஒவ்வொருவராக 

கலைந்து செல்கிறார்கள்...

அங்கே அந்த நிகழ்வை 

கூர்மையாக கவனித்து 

உண்மை தன்மையின் 

போக்கை முழுவதும் உணர்ந்த 

காலம் மட்டும் 

அங்கே அவர்கள் கூட்டாக நின்று 

பேசிய கூட்டத்தில் 

கலந்துக் கொள்ளாமல் 

வெறுமனே அவர்கள் பேசிய 

பேச்சின் கற்பனை கலந்த 

நிகழ்வை வேடிக்கையாக பார்த்து நகைத்து விட்டு 

அந்த பெரும் இருளில் கலக்கிறது...

இங்கே உண்மை எது பொய் எது 

என்று கேட்டு அறிந்துக் கொள்ள 

மனமில்லாமல் 

எதை எதையோ தன் சுவைக்கு 

தகுந்தார் போல 

பேசி களித்து களி நடனம் 

புரிபவர்கள் மத்தியில் காலம் ஏன் 

அங்கே நடந்ததை சாட்சியாக சொல்லவில்லை என்று 

என்னை போன்ற கோபம் 

கொள்பவர்களையும் 

காலம் கண்டுக் கொள்ளாமல் 

தன் போக்கில் 

இயல்பாக நிதானமாக 

பயணிப்பதை இங்கே 

என்னை தவிர எவரும் வேடிக்கை 

பார்க்கவில்லை 

என்பது தான் காலத்தின் துயரம்...

#இப்படிக்குகாற்றைநேசிப்பவள்❤️(7).

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/06/25/திங்கட்கிழமை.

அந்தி மாலை நேரம் கடந்த மெல்லிய இரவின் நொடிகளில் எழுதப்பட்ட கவிதை ❤️.

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️(7)


எந்த நோக்குமுமின்றி 

இயல்பாக 

கடந்து செல்லும் போது ரசிக்கப்படும்

நிகழ்வுகளில் படர்ந்து இருக்கிறது 

ஒரு துளி 

வாழ்வின் ரசனை...

பெரும் சமுத்திரத்தின் 

துயரத்தின் இடையே 

இது என்ன மாயம் 

செய்து விடப் போகிறது என்று 

கேட்பவர்களுக்கு மத்தியில் 

நான் அவர்களின் 

விட்டேத்தியான பேச்சை 

அங்கே தவழ்ந்து வரும் 

காற்றில் புதைத்து விட்டு 

அந்த ரசனையின் ஆழமான 

மௌனம் சூழ்ந்த மொழிகளை 

கூர்ந்து கேட்கிறேன்...

அது ஏதோவொரு மாய இசையை 

இசைத்து 

என் செவிகளுக்குள் இயல்பாக 

புகுத்தி 

சிறு குழந்தை போல 

துள்ளி நகைக்கிறது...

நானும் அதன் நகைப்பில் 

இயல்பாக கலக்கிறேன்...

இங்கே 

பெரும் பிரபஞ்சத்தின் 

மாய வித்தையின் மெல்லிய 

நுணுக்கங்களை யார் அறியக் கூடும் 

என்னை போன்ற 

வாழ்வின் ரசனையின் மீது 

பெரும் கிறுக்கு பிடித்தவர்களை 

தவிர!

#இப்படிக்குகாற்றைநேசிப்பவள்❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/06/25/திங்கட்கிழமை.

அந்தி மயங்கும் வேளை தாண்டிய மெல்லிய இரவில் எழுதியது

செவ்வாய், 24 ஜூன், 2025

சிறுகதை உலகம்: தனிமரம் -சிறுகதை எழுத்தாளர் உஷா தீபன் அவர்கள்


அனைவருக்கும் இனிய வணக்கம் நேயர்களே 🎉🙏🎻.

இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் உஷா தீபன் அவர்களின் அற்புதமான கதையான தனிமரம் -சிறுகதை கேட்டு மகிழுங்கள் நேயர்களே...

கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🎉 🙏 🤝 🦅.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎉 🙏 🎻 

https://youtu.be/xj9Y7wyV2G0?si=bpPrL4qXkjBCr8sg

திங்கள், 23 ஜூன், 2025

கேளா வரம்-சிறுகதை உலகம்

 


வணக்கம் நேயர்களே 🎉🙏.

இன்று சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய அற்புதமான சிறுகதை கேளா வரம்- சிறுகதை... கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🎉🙏🎻.

கீழேயுள்ள யூடியூப் லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🙏 🎉 🎻.

https://youtu.be/XSbbr8u-n9k?si=FZhCQ3st2LhiOGkj

சனி, 21 ஜூன், 2025

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (6) அந்த துயரமெனும் வீதியில்...


அந்த துயரமெனும் வீதியில் தான் 

நான் இராப்பகலாக 

காலம் காலமாக அலைந்து 

திரிந்துக் கொண்டு இருக்கிறேன்...

அன்றொரு நாள் நான் ஏதோ என் கைகளில் விழுந்த உணவை 

சாப்பிட்டு முடித்து சற்றே கண்ணயர 

அந்த புழுதி படிந்த 

கிழிந்த கம்பளியை உதறி 

விரித்து போடுவதை பார்த்து விட்டு 

அந்த அதிசய மனிதர் ஓடோடி வந்து 

அந்த கம்பளியை பிடுங்கி 

தூர எறிந்து விட்டு தன்னிடம் உள்ள 

புது கம்பளியை விரித்து போடுகிறார்..

இதை தூர இருந்து கவனித்து வந்த 

எனது உணவு பங்காளியான 

அந்த ஜீவராசியோ 

அந்த அதிசய மனிதர் மேல் 

பாய்ந்து பதம் பார்த்ததில் 

அந்த புழுதி படிந்த கம்பளியை 

அப்படியே போட்டுவிட்டு 

ஓடோடி மறைகிறார் 

அந்த அதிசய மனிதர்...

அந்த ஜீவராசி அந்த புழுதி படிந்த 

ஆயிரம் பொத்தல்கள் உள்ள கம்பளியை பெரும் நேசத்தோடு 

தனது வாயில் கவ்வி என்னிடம் 

தந்து விட்டு என் மேனியை நாவால் 

தடவி தன் நேசத்தை வெளிப்படுத்தி

என் அருகே படுத்து ஆழ்ந்த 

நித்திரை கொள்வதை பார்த்து 

நான் என்னில் வழிந்த கண்ணீரை 

துடைத்துக் கொண்டு 

மெல்ல நகர்ந்து அந்த புது வாசம் 

மாறாத கம்பளியை 

அந்த குளிரில் குறுகி என் அருகே 

படுத்து இருந்த 

அந்த ஜீவராசியின் மீது போர்த்தி விட்டு ஆழ்ந்த நிம்மதி அடைகிறேன்..

இங்கே பெரும் நேசத்தின் 

புரிதலுக்கான இலக்கணத்தை

யார் உணரக் கூடும்?

அந்த எனது பெரும் நேசமான

உணவு பங்காளியை போல ...

#இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (6).

#இளையவேணி கிருஷ்ணா.

நாள்:21/06/25/சனிக்கிழமை.





இப்படிக்கு காற்றை நேசிப்பவள்(5) ❤️சுமைப்பொதிகளாக ஆயிரம் ஆயிரம் பந்தங்கள்....

 


சுமைப் பொதிகளாக 
ஆயிரம் ஆயிரம் பந்தங்களை 
சுமந்து திரிகிறேன் 
இந்த பிரபஞ்சத்தின் காலவெளிதனிலே...
என்றோ என்னை அழைக்கும் காலனுக்கு நான் எளிதாக 
பணிந்து விட முடியாமல் 
திமிறிக் கொண்டு 
அழைக்கிறேன்...
நான் சேர்த்து வைத்த பந்தங்களின் 
செவிகளோ செவிடாக 
சுயமற்று பயணித்து 
என்னை ஒரு சவமாக 
கடந்து செல்கிறது...
நான் அந்த எமனின் வாயெனும் 
குகையில் கொஞ்சம் கொஞ்சமாக 
உள்ளே செல்கிற போது 
என்னில் இருந்து வழிந்த 
அந்த இரத்தத்தின் சிறுதுளியின் 
நாற்றத்தை பொறுக்க முடியாமல் 
வேகமாக ஓட்டமெடுத்து 
ஓடுகிறது அந்த பந்தமெனும் 
பெரும் கூட்டம்...
இது வரை என் கதறலுக்கு 
செவிடாக நடித்த கூட்டம் 
என்னில் இருந்து பயணித்த 
இரத்தத்தின் நாற்றத்தில் 
உயிர்ப்பித்து ஓடுகிறதே என்று 
நான் சூட்சம உடலில் 
கவனிக்க தொடங்கிய போது 
என்னோடு காலம் காலமாக 
பயணித்து வந்த அந்த பந்தத்தின் 
நாற்றத்தை உதிரமாக வெளியேற்றி
என்னை இலேசாக்கி அந்த பிரமாண்டமான சூட்சம உலகில் சுகமாக மிதந்து சென்று கொண்டிருப்பதை பார்த்து 
காலமும் கொஞ்சம் கரைந்து தான் போகிறது...
#இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:21/06/25/சனிக்கிழமை.



இப்படிக்கு காற்றை நேசிப்பவள்(4) ❤️

 

ஓடிக் கொண்டே இருக்கும் 

தற்கால சிலபல 

துன்ப நிமிட துகளின் 

புழுதியில் இருந்து 

சற்றே எனை 

விடுவித்துக் கொண்டு 

இதோ என்னை தாங்கி செல்லும் 

இந்த காலமெனும் தோணியின் 

ஒரு மூலையில் 

என்னை 

ஆசுவாசப்படுத்திக் கொண்டு 

கடந்த கால நினைவுகளின் 

சுகங்களை கொஞ்சம் 

அசைப்போட்டு அனுபவித்து 

சற்றே இளைப்பாறுகிறேன்...

இதை பார்த்த அந்த சந்திர தேவனோ 

கொஞ்சம் காதலோடு 

தன் கிரணங்களால் 

என்னை அரவணைத்து 

காதல் மொழி 

என் காதில் கிசுகிசுத்து

சிலிர்ப்பூட்டி மகிழ்வதை பார்த்த 

காலமும் கொஞ்சம் 

நெகிழ்ந்து தான் போனது...

எத்தனை துன்பத்தின் சுவடுகளை 

சுமந்து ரணமாகிய 

மனதோடு இதுநாள் வரை 

பயணித்து இருந்தாளோ என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/06/25.சனிக்கிழமை

செவ்வாய், 3 ஜூன், 2025

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (3)


இந்த உலகத்தின் 

பார்வைக்காக தான் நான் 

வாழ்ந்துக் கொண்டு இருக்கிறேன் என்றால் 

நான் சுவாசிக்கும் காற்றே 

என்னை பெரும் தீ கொண்டு 

பொசுக்குகிறது...

சமூக அல்ப விவகாரங்கள் எல்லாம் 

என்னை ஈர்க்க ஆயிரம் ஆயிரம் 

முயற்சிகள் செய்து 

தோற்றுப் போனபோதும் 

பெரும் வெறிக் கொண்டு 

என் அடிமைசாசனத்தை எழுதி வாங்க 

அர்த்தஜாம பேயின் 

புத்திக் கொண்டு என்னை 

ஒரு வட்டம் போட்டு சுற்றி சுற்றி 

வருகிறது...

இங்கே என்னை ஈர்க்கும் எதையும் 

பெரும் ஆக்ரோசம் கொண்டு 

அழித்து விட்டு

கொன்று தீர்த்து 

பேரமைதிக் கொண்டு 

அந்த சூட்சம உலகில் பயணிக்க 

நினைக்கும் போது 

எங்கிருந்தோ வந்த 

அந்த அதிசய காற்றின் மென்மையில் 

நான் இழக்கிறேன் என்னை 

என்னையும் அறியாமல்...

என்ன ஏதுவென்று 

தெரிந்துக் கொள்ள நினைத்து 

கண் விழிக்கும் வேளையில் தான் 

தெரிகிறது 

நான் பெரும் மாயையின் பிடியில் 

அகப்பட்டு துடிக்கிறேன் என்று...

இங்கே எதிலும் பற்றற்று 

என்னோடு பயணிக்கும் 

ஆன்மா மட்டும் 

எதுவுமே நடக்காதது போல 

என்னை மெல்லிய புன்னகை செய்து 

என்னுள் பேரமைதிக் கொண்டு 

யோக நித்திரை கொள்ளும் போது 

நான் விழித்துக் கொள்ளலின் 

தத்துவத்தை 

உணர்ந்துக் கொண்டு 

அதிசய நித்திரையின் 

ஆட்கொள்ளலில் 

பேரமைதிக் கொள்கிறேன்...

இங்கே இந்த பிரபஞ்சத்தின் 

பெரும் தத்துவத்தை யார் அறிந்துக் கொள்ள கூடும் என்று நினைத்து...

#இப்படிக்குகாற்றைநேசிப்பவள்❤️(3).

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/06/25/செவ்வாய்க்கிழமை.

திங்கள், 2 ஜூன், 2025

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (2)


கணந்தோறும்

எனை காலம் நலம் விசாரிக்காமல் 

கடந்து செல்ல 

நான் அனுமதித்தது இல்லை!

இன்னும் எவ்வளவு நாட்கள் 

இந்த நலம் விசாரித்தல் 

தொடரும் என்று 

என்னால் சொல்ல இயலாது...

அநேகமாக அந்த நலம் 

விசாரித்தல் குரல் 

என் காதில் விழாத போது 

நான் நிச்சயமாக அந்த காற்றோடு சற்று நிதானமாக 

தீராத காதல் மொழி பேசி 

இந்த பிரபஞ்சத்தில் 

லயித்து இருப்பேன் சூட்சமமாக 

அந்த நொடிப்பொழுதில் 

காலம் என் மீது கொண்ட 

தீராத காதலை கரைக்க 

பெரும் நதியை தேடி 

ஒரு பித்து நிலையில் 

அலைந்து திரிந்துக் கொண்டு இருக்கும்...

நானோ எங்கோ இருந்து 

ஒரு சிறு கண்ணீர் துளியை 

வெட்டவெளியில் 

உலாவ விட்டுக் கொண்டு இருப்பேன் 

அது தேடும் நதியில் 

அந்த பெரும் காதலின் சுமையை இறக்கி விட்டு 

இலகுவான மனதோடு 

அந்த சூட்சம உலகில் 

பயணிப்பதற்காக காத்திருப்பேன்...

இங்கே இருபெரும் காதலின் சூட்சம தீண்டலை 

வெகுஜன மக்களில் 

யார் அறியக் கூடும்?

என்கின்ற கேள்வியோடே 

மிகவும் நிதானமாக பயணிப்பேன்...

#இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (2).

#இளையவேணிகிருஷ்ணா

நாள்:02/06/25

திங்கட்கிழமை.

இப்படிக்கு காற்றை நேசிப்பவள்(1) ❤️


இளைப்பாற ஒரு எளிமையான படகு

இந்த பிரபஞ்சத்தின் அழகை

ரசிக்க தன்னை அர்பணிக்கிறது...

இங்கே சிறகுகள் நைந்த பின்பும் 

அதன் எச்சங்கள் 

என்னோடு இருக்கும் வரையில் 

என்னோடு 

அந்த உருவமில்லா காதல் 

பயணித்துக் கொண்டு 

இருக்கும் வரையில் 

நான் பேரன்போடு நீண்ட நெடிய 

பயணத்தை தொடர்வேன் 

என் சிறகுகளை மெல்லிய தென்றல் 

தீண்ட...

அதைக் கொண்டு 

புறம் பேசாமல் கொஞ்சம் 

அமைதியாக என்னோடு சத்தம் 

இல்லாமல் பயணியுங்கள் 

மானுடர்களே!

இல்லை எனில் சத்தம் இல்லாமல் 

என்னைவிட்டு 

விலகிச் செல்லுங்கள்...

இங்கே வாழ்தல் அப்படி ஒன்றும் 

நீங்கள் நினைப்பது போல 

கடினமானது அல்ல...

நீங்கள் சிருஷ்டித்த சிறு உலகிற்கும் 

நான் எனக்குள் சிருஷ்டித்து 

பயணிக்கும் பெரும் உலகிற்கும் 

இங்கே மில்லியன் தூர அளவு 

இடைவெளி நிரம்பி வழிகிறது...

அந்த இடைவெளியின் நீட்சியை 

நீங்கள் குறுக்க முயலுங்கள்...

என்னை அந்த இடைவெளியை 

குறுக்க சொல்லி மன்றாடாதீர்கள்...

இங்கே என் சிறுதுளி நொடியும் 

அற்புதமானது 

அதை அனுபவித்தல் விடுத்து 

வெளியே வர 

என்னால் நிச்சயமாக இயலாது....

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/06/25.

திங்கட்கிழமை.

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...